மண்ணச்சநல்லூர் மல்லுக்கட்டு.. பரமேஸ்வரி அவுட்.. பொன்.செல்வராஜ் இன்.. அதிமுகவில் யாருக்கு வாய்ப்பு..?
திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் அதிமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான பரமேஸ்வரிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க அக்கட்சியின் தலைமைக்கு துளியும் விருப்பமில்லை.
காரணம் ஹைமாஸ் விளக்கு அமைப்பதில் வெளியான ஆடியோ விவகாரம் தொடங்கி ஒன்றியச் செயலாளருக்கு பளார் விட்டது முதல் சர்ச்சைக்கு மேல் சர்ச்சைகளில் சிக்கியவர் பரமேஸ்வரி முருகன் எம்.எல்.ஏ.
இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் மண்ணச்சநல்லூர் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது அங்கு பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூரை பொறுத்தவரை அரிசி ஆலைகள் அதிகம் உள்ள பகுதியாகும். மண்ணச்சநல்லூர் பொன்னி அரிசி என்றால் அதற்கு தனி மவுசுதான், அந்தளவுக்கு அங்கு நெல் சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. இப்படிப்பட்ட மண்ணச்சநல்லூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த பரமேஸ்வரி முருகன். ஜெயலலிதா இருக்கும் வரை இருந்த இடம் தெரியாமல் இருந்த இவர் அதற்கு பிறகு தனது தடாலடிகளை தொடங்கினார்.

புகார்கள்
சமயபுரம் கோயிலில் ஹைமாஸ் விளக்கும் அமைக்கும் ஒப்பந்த பணிக்காக கமிஷன் கேட்டது, ஒன்றியச் செயலாளருக்கு பளார் விட்டது, மாளிகை போல் வீடு கட்டியது, தனது வீடு திறப்பு விழாவுக்கான நாளிதழ் விளம்பரத்தில் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். படங்களை தவிர்த்தது என இவர் மேல் ஏராளமான புகார்கள் தலைமையிடம் குவிந்துள்ளன.

யாருக்கு வாய்ப்பு
இதனால் வரும் தேர்தலில் புதிய முகம் ஒன்றுக்கு மண்ணச்சநல்லூர் தொகுதியில் வாய்ப்பு வழங்குவது என முடிவெடுத்திருக்கிறார் முதலமைச்சர் இ.பி.எஸ். அந்த வகையில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பொன்.செல்வராஜ் வேட்பாளர் ரேஸில் முதலிடத்தில் இருக்கிறார்.

சர்வே
இதனிடையே இவருக்கு போட்டியாக முன்னாள் அமைச்சர் பூனாட்சி, முன்னாள் எம்.எல்.ஏ. பிரின்ஸ் தங்கவேல் உள்ளிட்டோரும் சீட் கேட்டு வருகின்றனர். ஆனால் இவர்களெல்லாம் இதற்கு முன்னர் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்கள் என்பதால், ஜெயலலிதா பாணியில் இதுவரை எம்.எல்.ஏ.வாகாத பொன்.செல்வராஜை வேட்பாளராக களமிறக்க அதிமுக தலைமை முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கூடுதல் ப்ளஸ்
இதுமட்டுமல்லாமல் முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் பொன்.செல்வராஜுக்கு கூடுதல் பிளஸாக உள்ளது. இதனிடையே அதே முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சர் செல்வராஜ் மகனுமான என்.எஸ்.கே. கருணை ராஜா திமுக சார்பில் அங்கு களமிறங்குவார் எனத் தெரிகிறது.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு?












Click it and Unblock the Notifications