பேப்பர் பொறுக்கும் ஜப்பான் செல்வராஜ்.. கல்லை தூக்கி போட்டு கொன்ற காஜாமைதீன்.. திருச்சியில் அதிர்ச்சி
திருச்சியில் தொழிலாளி கல்லை தூக்கி போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்
திருச்சி: ஜப்பான் செல்வராஜுவுக்கு பேப்பர் பொறுக்குவதுதான் தொழில்.. சாலையோரம் தூங்கி கொண்டிருந்த இவரை காஜாமொய்தீன் என்ற இளைஞர் கல்லை தூக்கி போட்டு கொன்றுவிட்டார்.. கொலை செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது!
திருச்சி பெரிய கடை வீதியை சேர்ந்தவர் ஜப்பான் செல்வராஜ்.. 55 வயதாகிறது.. பழைய பாட்டில், பேப்பர்களை பொறுக்கி அவைகளை சேமித்து விற்பனை செய்து வந்தார்... இவருக்கு 2 பெண்கள், 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

சில வருடங்களுக்கு முன் மனைவி இறந்துவிட்டார்.. மனைவி மீது ஜப்பான் செல்வராஜுக்கு பிரியம் அதிகம்.. அதுவரை சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர், மனைவி இறந்த பிறகு அந்த வீட்டிற்கு செல்லவே விருப்பமில்லை.. அதனால் தன்னுடைய உறவினர்களிடம் தந்துதான் வளர்த்து வருகிறார்.
எப்போதாவது பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், அங்கு சென்று பார்த்து விட்டு வருவார்.
வழக்கமாக வேலையை முடித்ததும், கோட்டை போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் உள்ள கடை வாசலில் தான் ஜப்பான் செல்வராஜ் தூங்குவார்.. விடிகாலை எழுந்ததும் பரபரப்பான வேலையில் இறங்கி விடுவார்.. அப்படித்தான் நேற்றிரவும் தூங்கினார்.. விடிகாலை 4 மணி இருக்கும்.. யாரோ ஒருவர் ஜப்பான் செல்வராஜ் தலையில் கல்லால் அடித்து கொலை செய்தார்.
பக்கத்திலேயே போலீஸ் ஸ்டேஷன் உள்ளதால், போலீசாரும் விரைந்து வந்தனர்.. ரத்த வெள்ளத்தில் ஜப்பான் செல்வராஜ் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிவு செய்து விசாரணையும் தொடங்கினர்
அப்போதுதான் கல்லால் அடித்து கொன்றவர் பெயர் காஜா மொய்தீன் என்பது தெரியவந்தது. இவர் எப்போதுமே அந்த பகுதியில் சுற்றி கொண்டே இருப்பாராம்.. மனநிலையும் சற்று பாதிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.. கொலையை செய்துவிட்டு, ரத்தத்தை பார்த்து பயந்துபோய் காஜாமைதீன் ஒரு இடத்தில் தலைமறைவாக இருந்தார்.
அவரை கைது செய்த போலீசார் விசாரணை செய்கின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட ஜப்பான் செல்வராஜ் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேரடி பஜாரில் தூங்கிக் கொண்டிருந்தவரை கல்லால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் தந்து வருகிறது.
-
குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம் -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
என்டிஏவுக்கு தமிழ்நாடே 'நோ'.. நான் இருக்கும் வரை பாஜகவுக்கும் நோ எண்ட்ரி.. அதிர விட்ட மு.க.ஸ்டாலின்! -
திருச்சியில் திமுக மாநாடு! 10 லட்சம் பேர் பங்கேற்பு! முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறாரா ஸ்டாலின்? -
புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications