பள பளக்கும் தங்கம்.. ஆனால் "அந்த" இடத்தில் போய் வச்சு கடத்திருக்கீங்களே.. குருவிகளா!
திருச்சி ஏர்போர்ட்டில் 50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
Recommended Video
திருச்சி: குருவின்னு சொல்றாங்க.. கொக்குன்னு சொல்றாங்க..ஆனா, திருச்சி ஏர்போர்ட்டில் மட்டும் தங்க கடத்தல்காரர்கள் நடமாட்டம் ஏன் இவ்வளவு அதிகமாகவே இருக்கிறது என்றே தெரியவில்லை. விடிய விடிய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், 100 பேரிடம் இருந்து 50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஏர்போர்ட்களில் தங்கம் கடத்தல் நடக்காத வண்ணம் அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து அவற்றை தடுத்து வருகிறார்கள்.
அதில் பிடிபடுபவர்களையும் பிடித்து கைது செய்து உள்ளே வைக்கிறார்கள். அப்படியும் ஒருசிலர் டிமிக்கி கொடுத்து தங்கத்தை கடத்தவும் செய்கிறார்கள்.. இது நிறைய திருச்சி ஏர்போர்ட்டில் நடந்து வருகிறது.. அதனால்தான் கூடுதல் விழிப்புணர்வுடன் அதிகாரிகள் அங்கு கண்காணித்து வருகிறார்கள்.

ஏர்போர்ட்
நேற்றுகூட, திருச்சி ஏர்போர்ட்டில் வெளிநாடுகளில் இருந்து வரும் ஃபிளைட்களில் சிலர் தங்கம் கடத்தி வருகிறார்கள் என்று மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனால் 22 பேர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் ஏர்போர்ட்டுக்கு விரைந்து வந்தனர். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அவர்களது உடைமைகளையும் சோதனையிட்டனர்.

தங்கம் கடத்தல்
அப்போது மொத்தம் 100 பேர் மாட்டினார்கள்.. அவர்கள் கொண்டு வந்த பொருட்கள், அணிந்திருந்த உள்ளாடைகள், மலக்குடல் ஆகியவற்றில் தங்கத்தை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. கிட்டத்தட்ட 50 கிலோ தங்கம் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோக எலக்ட்ரிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தங்கத்தை கடத்தி வந்தவர்கள், அதனை வாங்க வந்தவர்கள், கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என இந்த 100 பேரை பிடித்து, பல மணி நேரமாக விசாரணை நடத்தினார்கள்.

எனிமா
100 பேரில் 15 பேர், மலக்குடலில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று, எனிமா தந்து, அதற்கு பிறகு அவர்களிடமிருந்து அந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இப்படி கடத்தி வந்தவர்களில் நிறைய பேர் கடத்தல் தொழிலில் ஈடுபடும் குருவிகள் என்கிறார்கள்.. ஒருசிலரை குருவிகளுக்கு ஏஜெண்டுகளாக செயல்படும் கொக்குகள் என்றும் சொல்கிறார்கள்.

மூளை யார்?
பிடிபட்ட இவர்களிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது. அவர்களின் செல்போன்களும் ஆராயப்பட்டு வருகின்றன. இதற்கெல்லாம் காரணம், கேங் லீடர் யார், பின்னணி என்ன என்பதெல்லாம் இன்னும் தெரியவில்லை. ஆனால், ஒரேநாளில் இவ்வளவு கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது.
-
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
விஜயை பார்க்க போகும் டெல்லி டீம்.. எப்படியாவது சம்மதிக்க வைப்போம்.. களமிறக்கப்பட்ட மாஸ்டர்மைண்டுகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு












Click it and Unblock the Notifications