அழுகிய பழங்களில் ஜூஸ்! நாள்பட்ட 266 கிலோ இறைச்சிகள் பறிமுதல்! திருச்சியில் 9 கடைகளுக்கு நோட்டீஸ்!
திருச்சி: நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட 9ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த நிலையில், திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.
இதில் ஒரு கடையில் அழுகிய பழங்களை கொண்டு மனசாட்சியே இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு ஜூஸ் கொடுக்கப்பட்டதை கண்டறிந்த அதிகாரிகள், 50 கிலோ பழங்களை அந்தக் கடையிலிருந்து பறிமுதல் செய்து அழித்தனர். அதேபோல் தில்லை நகர், சாஸ்திரி ரோடு, மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரபல ஹோட்டல்களிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

திருச்சி மற்றும் மணப்பாறை பகுதிகளில் பல்வேறு ஹோட்டல்களில் நடத்தப்பட்ட சோதனை மூலம் கடந்த 3 நாட்களில் நாள்பட்ட 266 கிலோ இறைச்சிகளை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 9 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 6 கடைகளுக்கு தலா ரூ.3,000 வீதாம் ரூ.18,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் மணப்பாறையில் இயங்கி வந்த பிரபல சைவ ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது தான். சமையலறை அசுத்தமாக இருந்ததோடு அழுகிய காய்கறிகள் ரெய்டில் சிக்கியது தான் இதற்கு காரணமாம்.

இதனிடையே இந்தச் சோதனை குறித்து கூறிய திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ரமேஷ் பாபு, ''ஷவர்மா உள்ளிட்ட கோழிக்கறி உணவுகளை மீதமாகிறதே என்பதற்காக உணவகம் நடத்துவோர் குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கக் கூடாது. அளவாக அன்றைய வியாபாரத்துக்கு தகுந்தாற் போல் தயாரிக்க வேண்டும். ''
''சமைக்கப்பட்ட ஷவர்மா உள்ளிட்ட கோழி இறைச்சிகள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் தங்கள் பகுதியில் கெட்டுப்போன உணவு பொருள் விற்பனை பற்றி உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் அளிக்கலாம்'' எனக் கூறியுள்ளார்.

இதனிடையே சேலம் மாவட்டம் எடப்பாடியில் 50 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சோதனைகள் தொடர்வதால் இன்னும் டன் கணக்கில் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications