லாட்ஜில் ரூம் போட்டு பெண்ணுடன் ஜாலி.. போட்டு கொடுத்த மேனேஜர்.. வசமாக சிக்கிய விஐபி மகன்!
லாட்ஜில் ரூம் எடுத்து தங்கிய அரசியல் பிரமுகர் கைது செய்யப்பட்டார்
திருச்சி: ராத்திரி நேரத்தில் இளம்பெண்ணுடன் ஓட்டலில் தங்கிய அரசியல் பிரமுகர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
திருச்சி ஜங்ஷன் ராயல் ரோடு பகுதியில் ஒரு லாட்ஜ் உள்ளது. இது அந்த பகுதியில் ரொம்ப ஃபேமஸ் ஆன லாட்ஜ் என்று சொல்லப்படுகிறது.
இங்கு மேனேஜராக இருப்பவர் தமிழரசன் என்பவர். இந்நிலையில், ராத்திரி 10.30 மணிக்கு ஒரு இளைஞர் ஒரு பெண்ணை அந்த லாட்ஜுக்கு கூட்டி வந்தார்.
தாங்கள் ரெண்டு பேரும் கணவன், மனைவி என்றும், தங்குவதற்கு ஒரு ரூம் வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். இதையடுத்து தமிழரசனும் அவர்களுக்கு ஒரு ரூம் ஒதுக்கி தந்தார். ஆனால், ரெண்டு பேரின் நடவடிக்கை மீதும் தமிழரசனுக்கு சந்தேகம் வந்தது. மேலும் அந்த அணிந்திருந்த டிரஸ்ஸை பார்த்ததும் சந்தேகம் வலுவானது.
அதனால் உடனே கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் தரவும், அவர்கள் லாட்ஜுக்கு விரைந்து வந்து விட்டனர். அவர்களிடம் போலீசார் யார், என்ன என்று விசாரணை நடத்தினர். போலீசாரை பார்த்ததுமே, இளைஞர் எல்லா விஷயத்தையும் ஒன்னுவிடாமல் சொல்லி விட்டார்.
ரூம் எடுத்து ஜாலியாக இருக்கலாம் என்று அந்த பெண்ணை அழைத்து வந்ததாகவும், புருஷன்-பொண்டாட்டின்னு சொன்னாதான் ரூம் தருவார்கள் என்பதால் மேனேஜரிடம் அப்படி பொய் சொன்னதாகவும் சொன்னார்கள்.
பின்னர் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த இளைஞர், சென்னை மண்ணயடியை சேர்ந்த நஜீம் என்பதும், அரசியல் கட்சி பிரமுகர் என்பதும் தெரியவந்தது. அது மட்டுமில்லை, இவர் மீது ஏகப்பட்ட கேஸ்-கள் நிறைய ஸ்டேஷன்களில் இருப்பதும் தெரியவந்தது. அந்த பெண்ணை மீட்ட போலீசார் திருச்சியில் உள்ள ஒரு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.