புதியதோர் உலகம் செய்வோம்.. பாரதிதாசன் வரிகளை மேற்கோள் காட்டி பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி
திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதிதாசனின் வரிகளை மேற்கோள் காட்டி பேசினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். தொடர்ந்து விழாவில் 1528 மாணர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில், முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய பிரதமர் மோடி பாரதிதாசன் வரிகளை மேற்கோள் காட்டி பேசினார். பிரதமர் மோடி கூறியதாவது:-

பாரதிதாசன் புதியதோர் உலகம் செய்வோம் என்று கூறியுள்ளார். இதுதான் உங்கள் பல்கலைக்கழக்த்தின் நோக்கமும் கூட. இந்தியாவை உலக நாடுகள் புதிய நம்பிக்கையோடு திரும்பி பார்க்கின்றன. பல்கலைக்கழகங்கள் சிறந்து விளங்கினால்தான் நமது நாடும் சிறந்து விளங்கும். கற்கும் கல்வி அறிவை வளர்ப்பதோடு, சகோதரத்துவம் நல்லிணக்கத்தையும் வளர்க்க வேண்டும்.
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சாதனை படைத்து வருகிறது. பண்டைய காலத்தில் காஞ்சிபுரம், மதுரை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகியவை கல்வியில் சிறந்து விளங்கியது. இவ்வாறு மோடி பேசினார். முன்னதாக திருச்சி வந்த பிரதமர் மோடிக்கு வழி நெடுகிலும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.












Click it and Unblock the Notifications