Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சி கோட்ட அலுவலகத்திற்கு இந்தி பெயர்! கடும் எதிர்ப்பால் வழிக்கு வந்த ரயில்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ரயில்வே மண்டல அலுவலகத்திற்கு 'கர்தவ்ய த்வார்' என பெயர் சூட்டப்பட்டு இருந்ததற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் திமுகவினர் அங்கு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் கருப்பு மையை பூசினர்.

மத்திய பாஜக அரசு எதாவது ஒரு வழியில் இந்தியை திணிக்க முயற்சித்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார். அந்த வகையில் திருச்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட "திருச்சி ரயில்வே மண்டல அலுவலகத்திற்கு 'கர்தவ்ய த்வார்'" என இந்தியில் பெயர் சூட்டப்பட்டு இருந்தது.

Railways Decides to Remove Kartavya Dwar Name from Trichy Divisional Office After Protests

இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு: நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்! இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க.!

'மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று' எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான #HindiImposition செயலில் இறங்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்துள்ளனர்.

பாஜக கொள்கையே இந்தி திணிப்பு தான்.. அதிகாரிகள் மீது பழி போடாதீங்க.. தமிழிசைக்கு சு.வெங்கடேசன் பதிலடி
பாஜக கொள்கையே இந்தி திணிப்பு தான்.. அதிகாரிகள் மீது பழி போடாதீங்க.. தமிழிசைக்கு சு.வெங்கடேசன் பதிலடி

வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (EPFO) ஏற்கெனவே 'பவிஷ்ய நிதி பவன்' என்ற பெயரைத் திணித்து விட்டனர். குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர்.

ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் 'ஜல் சக்தி' ஆகிவிட்டது. மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் காட்டினார்கள். கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்!

தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இனிமேல் யெஸ் சாருக்கு பதில் ஜெய்ஹிந்த் சொல்லுங்க.. குஜராத்தில் பள்ளிகளுக்கு புதிய உத்தரவு
இனிமேல் யெஸ் சாருக்கு பதில் ஜெய்ஹிந்த் சொல்லுங்க.. குஜராத்தில் பள்ளிகளுக்கு புதிய உத்தரவு

இந்த நிலையில் திமுகவினர் திருச்சி ரயில் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் திருச்சி ரயில்வே மண்டல அலுவலகம் அருகே வைக்கப்பட்டிருந்த கல்வெட்டினை கருப்பு மையை பூசி அழித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இதற்கிடையே பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, ரயில்வே நிர்வாகம் அந்த பெயரை நீக்க சம்மதம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+