சர்ப்ரைஸ் தந்த ஸ்டாலின்... காவலர் பதவியை துறந்த செல்வராணி வீட்டிற்கு நேரில் விசிட்
இடமாற்றம் செய்யப்பட்ட காவலர் செல்வராணி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவரது குடும்பத்தினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார்.
Recommended Video

திருச்சி: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு இரங்கற்பா எழுதியதால் இடமாற்றம் செய்யப்பட்ட காவலர் செல்வராணி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவரது குடும்பத்தினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார்.
திருச்சி மாவட்ட நுண்ணறிவு காவல் பிரிவில் பணியாற்றி வந்த பெண் காவலர் செல்வராணி ராமச்சந்திரன், அடிப்படையில் இலக்கிய ஆர்வம் கொண்டவர். பல்வேறு பட்டிமன்றங்களிலும் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் இலக்கியங்கள் மீது பற்றுகொண்ட அவர், கருணாநிதியின் மறைவுக்கு இரங்கற்பா எழுதி வீடியோவாக பதிவு செய்து அண்மையில் வெளியிட்டார். அது சமூகவலைதளங்களில் வைரலானது.
இதனையறிந்த திருச்சி மாவட்ட காவல்துறை செல்வராணியை நுண்ணறிவு பிரிவில் இருந்து மத்திய மண்டல காவல்துறைக்கு மாற்றியது.
இதற்கு பதிலளித்த செல்வராணி, ஜெயலலிதா காலமான போதும் கவிதை வாசித்தேனே அப்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. கருணாநிதிக்கு இரங்கற்பா இயற்றிய ஒரே காரணத்திற்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி, அவரது பணியை ராஜினாமா செய்தார்.
இந்தநிலையில், திருச்சி ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு, திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை ஆய்வுசெய்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காவலர் செல்வராணி குறித்த தகவல் அறிந்து இரவு 10 மணிக்கு அவரது வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்து அவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்












Click it and Unblock the Notifications