திருச்சி யானைகளை சாடிவயல் முகாமிற்கு மாற்றும் திட்டம் இல்லை - உயர்நீதிமன்றம்
திருச்சி: திருச்சி எம்ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள யானைகளை புதிதாக அமைக்கப்படும் சாடிவயல் யானைகள் முகாமுக்கு மாற்றும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி, எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தை முறையான பராமரிக்காததால் அடுத்தடுத்து யானைகள் மரணமடைந்து வருவதாகக் கூறி, எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தை முறையாக பராமரிக்கும் வகையில் செயல்பாட்டு வழிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையத்தின் நிறுவனர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, எம் ஆர் பாளையத்தில் உள்ள யானைகளை மத்திய அரசின் அனுமதி இல்லாமல் சாடிவயல் யானைகள் முகாமுக்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை மறுத்த தமிழக அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர், எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் சாடிவயல் யானைகள் முகாமுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டதாகவும், சுமார் 8 கோடி ரூபாய் செலவில் சாடிவயலில் யானைகள் முகாம் அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேசமயம், எம்ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்படும் யானைகளை, சாடிவயல் முகாமுக்கும் மாற்றும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும் மத்திய அரசின் அனுமதியில்லாமல் யானைகளை மாற்றப்பட மாட்டாது எனவும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சாடிவயல் யானை முகாமுக்கு பெறப்பட்ட அனுமதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதற்கிடையில், எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள யானைகளின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications