Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சியில் பிபின் ராவத் போட்டோவிற்கு ஆளுநர் ரவி அஞ்சலி! சீனாவை பின்வாங்க வைத்தவர் என புகழாரம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் படத்துக்கு திருச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார்.

குன்னூர் அருகே நேற்று ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலையே நீலகிரி சென்றார். இன்று வெலிங்டன் ராணுவ மையத்தில் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா-புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர். ராணுவ அதிகாரிகளும் பிபின் ராவத் உள்ளிட்டோர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா

பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா

இதனிடையே இன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பாரதிதாசன் பல்கலைக் கழக வளாகத்தில் பிபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி

ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி

அப்போது, பிபின் ராவத் படத்துக்கு மலர் வளையம் வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பொன்முடி. அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதியாக பணியாற்றிய காலத்தில் திடமான முடிவுகளை எடுத்தவர் பிபின் ராவத். அவருடன் பிரதமர் அலுவலகத்தில் ஒன்றாக பணிபுரிந்துள்ளேன்.

மிரண்ட சீனா

மிரண்ட சீனா

2017-ல் திபெத் எல்லையில் சீனா ஊடுருவ முயன்றபோது அந்த ராணுவத்தை பின்வாங்க வைக்கும் வகையில் காத்திரமான முடிவுகளை எடுத்தவர் பிபின் ராவத். நமது தேசம் மிகச் சிறந்த ராணுவ வீரரை இழந்துவிட்டது. பிபின் ராவத்தின் பணி மகத்தானது. அவரது மறைவு மிகப் பெரும் இழப்பாகும். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Recommended Video

    பயங்கர சத்தம்.. பதறிய மக்கள்.. Coonnoor-ல் நடந்தது என்ன?
    ஶ்ரீரங்கம் கோவிலில்..

    ஶ்ரீரங்கம் கோவிலில்..


    முன்னதாக இன்று காலை ஶ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வேதமந்திரங்கள் முழங்க அறநிலையத்துறை சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ராமானுஜர் சன்னதி, நம்பெருமாள் மூலஸ்தானம், தாயர் சன்னதி ஆகிய இடங்களில் சாமி தரிசனம் செய்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+