ஸ்ரீரங்கம் கோயில் ஆண்டாள் யானைக்கு 44 ஆவது பிறந்தநாள்.. கூடையில் சாக்லேட்டுடன் வந்த பர்த்டே பேபி
பிறந்தநாளையொட்டி ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள் சாக்லேட் கொடுத்து மகிழ்ந்தது.
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள் தனது பிறந்தநாளையொட்டி சாக்லேட் கொடுத்து மகிழ்ந்தது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டாள், லட்சுமி ஆகிய 2 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் யானை ஆண்டாளுக்கு நேற்று 44-வது பிறந்தநாள் ஆகும். இதனால் காலையில் குளித்து புத்தாடை அணிந்து, கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பக்தர்களுக்கு கூடையில் சாக்லேட்டை தூக்கிக் கொண்டு வந்து கொடுத்தது.
இதைப்பார்த்து பக்தர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். சிறுவர்கள் உற்சாகத்துடன் கூடையில் இருந்து சாக்லேட்டை எடுத்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து இணை ஆணையரும், பக்தர்களும் யானைக்கு பழங்களை வழங்கினர்.

பொள்ளாச்சி
கடந்த 28.02.1979-ம் ஆண்டு பொள்ளாச்சி வனப்பகுதியில் பிறந்த ஆண்டாளை திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் வாங்கி வளர்த்து வந்தார். அவர் பின்பு ஆண்டாளை காரமடை அரங்கநாத சுவாமி கோவிலுக்கு தானமாக வழங்கினார். காரமடை கோவிலில் இருக்கும் போது ரஜினிகாந்த நடித்த தம்பிக்கு எந்த ஊர் என்ற படத்தில் ரஜினிக்கு ஆசீர்வாதம் செய்யும் காட்சியில் வரும்.

ஸ்ரீரங்கம் கோயில்
பின்பு ஆண்டாளை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வேண்டும் என்று முறைப்படி எழுதி வாங்கி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த தொழில்அதிபர் ஒருவர் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தானமாக வழங்கினார். ஆண்டாள் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு 17.10.1986 அன்று தன் முதல் சேவையை ஆரம்பித்தது. பெருமாளுக்கான தன் முதல் சேவையிலேயே தங்க குடத்தில் புனித நீர் எடுக்கும் பாக்கியத்தை பெற்றது இந்த ஆண்டாள் என்பது குறிப்பிடத்தக்கது.

108 திவ்யதேசங்கள்
ஸ்ரீரங்கம் கோயில் பூலோக வைகுண்டம் என்றும் 108 திவ்யதேசங்களில் முதன்மையானது என்றும் போற்றப்படுகிறது. இங்கு வளர்க்கப்படும் இந்த ஆண்டாள் யானை புத்திசாலியாகும். இந்த கோயிலுக்கு இந்த யானை கொண்டு வரப்பட்ட போது அதற்கு 8 வயது. தற்போது இந்த கோயிலுக்கு வந்து 36 வருடங்கள் ஆகிறது.

8 ஆண்டுகள்
கடந்த 8 ஆண்டுகளாக ஆண்டாளை பராமரித்து வரும் பாகன் ராஜேஷ் மலையாளத்திலும் தமிழிலும் கேட்கும் கேள்விகளுக்கு ஆண்டாள் யானை சப்தம் எழுப்பியும் தலையை அசைத்தும் குழந்தையை போல பதில் சொல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடைபெறும் நாட்களில் அதிகாலை 3 மணிக்கெல்லாம் ஆண்டாள், பெருமாள் சன்னதி முன்பு ஆஜராகிவிடும். முதல் தரிசனத்தை பெருமாள், ஆண்டாளுக்குதான் தருவார். அது போல் முதல் பிரசாதமும் ஆண்டாளுக்குத்தான்.

மவுத்ஆர்கன்
இந்த யானை தும்பிக்கையால் மவுத்ஆர்கனை அழகாக வாசிக்கும். ஆண்டாள் சமத்து தானே என பாகன் கேட்டால் அதற்கு உம் என சப்தம் எழுப்புவாள். எங்கே போகணும் என்றால் தும்பிக்கை மூலம் பதில் அளிப்பாள். சாப்பிட்டாயா என கேட்டால் போதும் அதற்கு சப்தம்தான். இந்த யானை ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் செல்லப்பிள்ளையாகவே வலம் வருகிறாள். கோயில் வழக்கங்கள் எல்லாமே ஆண்டாளுக்கு நன்றாக தெரியும். பாகனின் கட்டளை இல்லாமலேயே அனைத்தையும் சரியாக செய்வாள். ஆண்டாளுக்கு கோயில் உள்ளே தனியாக பிரம்மாண்ட கொட்டகை கட்டப்பட்டுள்ளது. இதனால் ஆண்டாளுக்கு குஷியாம். ஒரு இடம் பிடிக்காவிட்டால் கிளம்பலாம் என பாகனுக்கு சிக்னல் கொடுப்பாளாம் இந்த ஆண்டாளு!
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications