Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கேஸ்ல இருந்து ரிலீவ் பண்றேன்”.. லஞ்சம் வாங்கிய டிஎஸ்பியை கையும் களவுமாக கப்பென பிடித்த ஆபீசர்ஸ்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: குற்றப் பத்திரிகையில் பெயர் சேர்க்காமலும், வழக்கிலிருந்து விடுவிப்பதற்கும் ஒரு லட்சம் கொடுக்குமாறு பத்திர எழுத்தரிடம் லஞ்சம் கேட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி ஆல்பர்ட் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் பூலாங்குடியை சேர்ந்த சிங்கமுத்து என்பவரின் மனைவி கீதா. இவர் ஆவண எழுத்தராக தொழில் செய்து வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டில் திருவெறும்பூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கு வீட்டுமனை பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார். குமார் பதிவு செய்த வீட்டு மனை சுந்தரம் என்பவருக்கு சொந்தமானது என்று சுந்தரம் புகார் அளித்ததன் பேரில் திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவு போலீசார் கடந்த 2021ஆம் ஆண்டு குமார் மற்றும் எட்டு நபர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Trichy crime branch police DSP arrested red handed for getting bribe of 1 lakh

இந்த குற்ற வழக்கில் பத்திர எழுத்தர் கீதாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் 2021ஆம் ஆண்டே பத்திர எழுத்தர் கீதாவை விசாரித்து போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் தற்போது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவில் பத்திர எழுத்தர் கீதாவை மீண்டும் அழைத்து நேற்று விசாரணை செய்துள்ளனர்.

பத்திர எழுத்தர் கீதாவை விசாரணை செய்த திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி ஆல்பர்ட், குற்றப் பத்திரிகையில் பெயர் சேர்க்காமலும், வழக்கிலிருந்து விடுவிப்பதற்கும் தனக்கு தனியாக ஒரு லட்சம் லஞ்சமாக கொடுக்குமாறு மிரட்டியுள்ளார் டிஎஸ்பி ஆல்பர்ட். லஞ்சம் கொடுக்க விரும்பாத பத்திர எழுத்தர் கீதா, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

கீதா அளித்த புகாரை அடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவருக்கு தாங்கள் சொல்வது போல செய்யுமாறு அறிவுறுத்தினர். அந்த ஆலோசனையின்படி, இன்று மாலை 3 மணியளவில் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆல்பர்ட்டிடம் பத்திர எழுத்தர் கீதா ஒரு லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தை கொடுத்தார். அதனை டிஎஸ்பி ஆல்பர்ட்டும் பெற்றுக்கொண்டார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் டிஎஸ்பி ஆல்பர்ட்டை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். பின்னர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+