Trichy Dubai: திருச்சி டூ துபாய் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளறு.. 160 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கம்
திருச்சி: திருச்சியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் விமானம் மீண்டும் திருச்சிக்கே திருப்பி விடப்பட்டது. திருச்சியில் விமானம் பத்திரமாக தரையிறங்கிய நிலையில், விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சீர் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சியில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் இன்று வழக்கம் போல புறப்பட்டு சென்றது. விமானத்தில் 160 பயணிகள் பயணம் செய்தனர்.

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
திருச்சியில் இருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில் நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து, உடனடியாக விமானம் திருச்சிக்கே திருப்பிவிடப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும் முன் சிறிது நேரம், விமானம் வானத்தில் வட்டமடித்தது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் மீண்டும் திருச்சிக்கே திருப்பிவிடப்பட்டதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். சிறிது நேரத்தில் அனுமதி கிடைத்ததும், திருச்சியில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
தயாராக இருந்த மருத்துவ குழுவினர்
பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக விமானம் அடிக்கடி தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு தாமதம் ஆவது பயணிகளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுப்பதாக உள்ளது.
விமானம் தரையிறங்கியதும், ஏர்போர்ட்டில் தயாராக இருந்த மருத்துவ குழுவினர் மற்றும் தீ அணைப்பு துறையினர், அவசர அவசரமாக வந்து பயணிகளை பத்திரமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சீர் செய்யும் பணியும் உடனடியாக தொடங்கியது.
விமான நிலைய அதிகாரிகள் விளக்கம்
முழுமையான ஆய்வுக்கு பிறகே விமானத்தில் ஏற்பட்ட கோளாறு பற்றிய முழு விவரம் தெரியவரும் என்று திருச்சி விமான நிலைய வட்டாரங்கள் கூறுகின்றன. விமானம் வானில் வட்டமடித்த பிறகு மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே தரையிறங்கியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், "விமானத்தில் சிறிய தொழில்நுட்ப கோளாறாக இருந்தாலும், பயணிகள் பாதுகாப்பே எங்களுக்கு முக்கிய நோக்கமாகும். விமானிகள் உரிய நேரத்தில் எடுத்த முடிவுகள் பெரிய விபத்தைத் தவிர்த்தது" என்றனர்.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications