திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கச்சிதமாக ஸ்கெட்ச்.. கணவனின் கதையை முடித்த மோகனாம்பாள்.. சொதப்பிய செட்டப்! கம்பி எண்ணும் ஆசிரியை

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி அருகே கள்ளக்காதலுக்காக கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த ஓவிய ஆசிரியை, கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையினரை போலீசார் கைது செய்தனர்- இந்த சம்பவம் திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அடுத்துள்ள பி.மேட்டூரை சேர்ந்தவர் பழனிவேல்(41) , நிலபுரோக்கராகவும், துறையூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மோகனாம்பாள் (38)தா.பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஓவிய ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

பழனிவேலுக்கும் மோகனாம்பாலுக்கும் 15, வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.பழனிவேலுக்கும் மனைவி மோகனாம்பாள் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது தகராறு ஏற்படுவது வழக்கம்.

கணவருடன் தகராறு

கணவருடன் தகராறு

மோகனாம்பாள் கணவரிடம் அவ்வப்போது கோபித்து கொண்டு பெற்றோர் அல்லது தனியாக வாடகைக்கு வீடு எடுத்து கொண்டு குழந்தைகளுடன் சென்று விடுவது வழக்கம். கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மோகனாம்பாள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தா.பேட்டைக்கு குழந்தைகளுடன் குடி வந்துள்ளார்.

உடலில் காயங்கள்

உடலில் காயங்கள்

இந்நிலையில் பெரியோர்கள் செய்து வைத்த சமரசத்தின் பேரில் பழனிவேலு மனைவி மோகனாம்பாள் மற்றும் குழந்தைகளுடன் தா.பேட்டையில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 19ம் தேதி பழனிவேல் உடலில் காயங்களுடன் தா.பேட்டை ,துறையூர் ரோட்டில் அமைந்துள்ள தேவரப்பம்பட்டி வனப்பகுதி சாலையோரத்தில் இறந்து கிடப்பதாக மோகனாம்பாளுக்கு தகவல் தெரிய வந்தது.

தனிப்படை போலீஸ்

தனிப்படை போலீஸ்

கணவரின் சடலத்தை பார்த்து கதறி அழுத மோகனாம்பாள் ஜெம்புநாதபுரம் காவல்நிலையத்தில் தனது கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்தார். தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

காவல்நிலையம்

காவல்நிலையம்

விசாரணையில் இறந்து போன பழனி வேலுவின் நண்பரும் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் போக்குவரத்து கிளை பணிமனையின் காசாளருமான ஆலத்துடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா (42) என்பவருக்கும் ஓவிய ஆசிரியை மோகனாம்பாளுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜா மற்றும் மோகனாம்பாளை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை செய்தனர்.

உல்லாசம்

உல்லாசம்

ஓவிய ஆசிரியை மோகனாம்பாளுக்கும் ராஜாவிற்கும் கடந்த நான்கு வருடமாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதில் பழனிவேலு வீட்டில் இல்லாத சமயம் ராஜா மோகனாம்பாளுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அப்போது மோகனாம்பாள் கணவர் பழனிவேல் தகராறு செய்வதால் அவரை கூலிப்படை வைத்து அடித்து உதைக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து ராஜா நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியை சேர்ந்த நண்பர் சுதாகர் என்பவரின் உதவியை நாடியுள்ளார்.

கொலை செய்ய முடிவு

கொலை செய்ய முடிவு

சுதாகர் திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பரத்(38)என்ற கூலிப்படை தலைவனை ராஜாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் பழனிவேலுவை கொலை செய்துவிட்டால் மோகனாம்பாளுடன் சேர்ந்து இருக்கலாம் என கருதிய ராஜா பழனிவேலுவை கொலை செய்து விடுமாறு பரத்திடம் கூறியுள்ளார். இதற்காக ராஜா கூலிப்படை தலைவன் பரத்திற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.

வழிமறித்து கொலை

வழிமறித்து கொலை

கடந்த 19ஆம் தேதி ராஜா கூலிப்படை தலைவன் பரத்திற்கு பழனிவேலுவை துறையூரில் வைத்து அடையாளம் காட்டியுள்ளார். இதையடுத்து துறையூரிலிருந்து தா.பேட்டைக்கு வீட்டிற்கு பைக்கில் வந்த பழனிவேலுவை காரில் பின்தொடர்ந்த கூலிப்படை தலைவன் பரத் தன் சகாக்களுடன் சேர்ந்து தேவரப்பம்பட்டி வனப்பகுதி அருகே பழனிவேலுவை வழிமறித்து நைலான் கயிறு மூலம் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.

செட்டப்

செட்டப்

உயிருக்கு போராடிய பழனிவேலுவை கூலிப்படையினர் தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் பைக்கை சேதப்படுத்தி விபத்தில் பழனிவேலு இறந்தது போல உருவகம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். கணவரின் உடலில் விபத்தில் ஏற்பட்டது போன்ற காயம் இல்லாமல் இருப்பதை கண்டு போலீசார் சந்தேகப்படுவதை அறிந்த மோகனாம்பாள் தான் தப்பித்துக் கொள்வதற்காக கணவர் சாவில் மர்மம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

தேடிய போலீஸ்

தேடிய போலீஸ்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் வெளிவந்ததை அடுத்து போலீசார் மோகனாம்பாள் கள்ளக்காதலன் ராஜா கூலிப்படையை அறிமுகம் செய்து வைத்த வளையப்பட்டி சுதாகர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் கொலை சம்பவத்தில் தொடர்புடைய கூலிப்படையினரை தேடி வந்தனர்.

சிறையில் அடைப்பு

சிறையில் அடைப்பு

இந்நிலையில் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளரை பகுதியில் பதுங்கியிருந்த சேர்ந்த பரத் (வயது 32), விக்னேஸ்வரன் (வயது 21), பிரதீப் (வயது 21), கார்த்திக் (வயது 26) ஆகிய கூலிப்படையினரையும் கைது செய்தனர். அவர்களை திருச்சி மாவட்டம், துறையூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மோகனாம்பாளை திருச்சி பெண்கள் சிறைச்சாலையிலும் மற்றவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மனைவியே கள்ளக்காதலுக்காக கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Police have arrested a woman painting teacher, a lover who killed her husband by mercenary for a illegal love affair near Trichy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X