Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இந்த குழந்தைக்கு அப்பா எங்கே".. துளைத்தெடுத்த உறவுகள்.. அரசு பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை

அரசு பெண் மருத்துவர் திருச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: குழந்தையின் அப்பா எங்கே? என்று உறவினர்கள் துளைத்தெடுத்ததால், பெண் டாக்டர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் துயரத்தை தந்து வருகிறது.

திருச்சி சுப்ரமணியபுரம் ஏரிக்கரை ரோட்டை சேர்ந்தவர் சஞ்ஜினி.. 30 வயதாகிறது.. இவர் ஒரு டாக்டர்.. மகளிர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவராக, தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதைதவிர, சுப்பிரமணியபுரம் பகுதியில் தனியாக கிளினிக் ஒன்றையும் வைத்து நடத்தி வந்துள்ளார்.. இவரது கணவர் பெயர் கோகுல்.. துறையூரை சேர்ந்தவர்.. இவரும் ஒரு டாக்டர்..

வழக்கு

வழக்கு

மற்றொரு புறம் விவாகரத்து பெறுவதற்கான வழக்கும் தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. இந்நிலையில் அவரது உறவினர் குடும்பத்தில் காதுகுத்தும் நிகழ்ச்சி நடந்துள்ளது.. இதற்காக குழந்தையை தூக்கி கொண்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.. ஏராளமான குடும்ப உறவினர்களும் அங்கே வந்திருந்தனர்.. அப்போது, சஞ்ஜினியிடம் குழந்தையின் அப்பா எங்கே? என்று கேட்டுள்ளனர்..

 அப்பா எங்கே?

அப்பா எங்கே?

அவர்களுக்கு தம்பதி பிரிந்த விஷயம் தெரியாது என்பதால், கணவரை பற்றியே விசாரித்து கொண்டிருந்தனர்.. ஒவ்வொருவரும் குழந்தையின் அப்பா எங்கே என்று கேட்டு கொண்டே இருந்ததால், அந்த நிகழ்ச்சியிலேயே மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார் சஞ்ஜினி.. வீட்டுக்கு வந்தும் இதை நினைத்தே கவலைப்பட்டு கொண்டிருந்தார்..

தற்கொலை

தற்கொலை

இந்நிலையில் நடுராத்திரி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இது குறித்து தகவலறிந்த கேகே நகர் மகளிர் போலீசார் சஞ்ஜினியின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிறகு விசாரணையையும் கையில் எடுத்தனர்.. காதுகுத்து நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் கணவர் எங்கே என்று ஒரே மாதிரியாக கேட்கவும்தான் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.. இது தொடர்பாக மேலும் விசாரணை நடக்கிறது..

விசாரணை

விசாரணை

பெண் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இப்படித்தான் 2 நாளைக்கு முன்பும் கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை கொண்டார்.. தொடர்ந்து படித்த டாக்டர்களே இப்படி தற்கொலையில் ஈடுபட்டு வருவது திருச்சி மாவட்டத்தில் கவலையை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+