"இந்த குழந்தைக்கு அப்பா எங்கே".. துளைத்தெடுத்த உறவுகள்.. அரசு பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை
அரசு பெண் மருத்துவர் திருச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
திருச்சி: குழந்தையின் அப்பா எங்கே? என்று உறவினர்கள் துளைத்தெடுத்ததால், பெண் டாக்டர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் துயரத்தை தந்து வருகிறது.
திருச்சி சுப்ரமணியபுரம் ஏரிக்கரை ரோட்டை சேர்ந்தவர் சஞ்ஜினி.. 30 வயதாகிறது.. இவர் ஒரு டாக்டர்.. மகளிர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவராக, தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இதைதவிர, சுப்பிரமணியபுரம் பகுதியில் தனியாக கிளினிக் ஒன்றையும் வைத்து நடத்தி வந்துள்ளார்.. இவரது கணவர் பெயர் கோகுல்.. துறையூரை சேர்ந்தவர்.. இவரும் ஒரு டாக்டர்..

வழக்கு
மற்றொரு புறம் விவாகரத்து பெறுவதற்கான வழக்கும் தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. இந்நிலையில் அவரது உறவினர் குடும்பத்தில் காதுகுத்தும் நிகழ்ச்சி நடந்துள்ளது.. இதற்காக குழந்தையை தூக்கி கொண்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.. ஏராளமான குடும்ப உறவினர்களும் அங்கே வந்திருந்தனர்.. அப்போது, சஞ்ஜினியிடம் குழந்தையின் அப்பா எங்கே? என்று கேட்டுள்ளனர்..

அப்பா எங்கே?
அவர்களுக்கு தம்பதி பிரிந்த விஷயம் தெரியாது என்பதால், கணவரை பற்றியே விசாரித்து கொண்டிருந்தனர்.. ஒவ்வொருவரும் குழந்தையின் அப்பா எங்கே என்று கேட்டு கொண்டே இருந்ததால், அந்த நிகழ்ச்சியிலேயே மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார் சஞ்ஜினி.. வீட்டுக்கு வந்தும் இதை நினைத்தே கவலைப்பட்டு கொண்டிருந்தார்..

தற்கொலை
இந்நிலையில் நடுராத்திரி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இது குறித்து தகவலறிந்த கேகே நகர் மகளிர் போலீசார் சஞ்ஜினியின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிறகு விசாரணையையும் கையில் எடுத்தனர்.. காதுகுத்து நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் கணவர் எங்கே என்று ஒரே மாதிரியாக கேட்கவும்தான் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.. இது தொடர்பாக மேலும் விசாரணை நடக்கிறது..

விசாரணை
பெண் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இப்படித்தான் 2 நாளைக்கு முன்பும் கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை கொண்டார்.. தொடர்ந்து படித்த டாக்டர்களே இப்படி தற்கொலையில் ஈடுபட்டு வருவது திருச்சி மாவட்டத்தில் கவலையை தந்து வருகிறது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications