ஆன்லைன் ரம்மி.. ரூ.4 லட்சத்தை இழந்த கூலி தொழிலாளி.. திருச்சியில் மேலும் ஒருவர் தற்கொலை!
திருச்சி: ஆன்லைன் ரம்மியால் சுமார் ரூ.4 லட்சம் வரை பணத்தை இழந்த கூலி தொழிலாளியான வில்சன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பணத்தை இழப்பதோடு, தற்கொலை செய்து கொள்வதால் தமிழ்நாட்டில் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் பண இழப்பை ஏற்படுத்துவதோடு, உயிரையும் குடித்து வரும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக அனைவரும் குரல் எழுப்பி வருகின்றனர். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வலியுறுத்தி அரசியல் கட்சியினரும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

திருப்பு அனுப்பிய ஆளுநர்
இதனிடையே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி, சுமார் 4 மாதங்கள் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கிடப்பில் போட்டு, தமிழ்நாடு சட்டசபைக்கே திருப்பி அனுப்பினார். அதேபோல் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார்.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா
இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசு தரப்பில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வர மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் விளக்கம் அளித்திருந்தது.

திருச்சியைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருச்சி மாவட்டம் அருகே அஞ்சல்காரன்பட்டியைச் சேர்ந்த 26 வயதாகும் கூலி தொழிலாளியான வில்சன், ஆன்லைன் ரம்மியை தீவிரமாக விளையாடி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான அவர், கடன் பெற்று சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக சுமார் 4 லட்சம் ரூபாய் வரை பண இழப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்து இருவர் தற்கொலை
இந்த கடனை கொடுக்க முடியாததால் மன உளைச்சலில் இருந்த அவர், திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த உறவினர்கள், அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வில்சன் உயிரிழந்தார். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஆன்லைன் ரம்மியால் ரூ.16 லட்சம் பணத்தை இழந்து நேற்று தற்கொலை செய்த நிலையில், இன்று திருச்சியைச் சேர்ந்த மேலும் ஒருவர் தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications