ஆன்லைன் ரம்மி.. ரூ.4 லட்சத்தை இழந்த கூலி தொழிலாளி.. திருச்சியில் மேலும் ஒருவர் தற்கொலை!
திருச்சி: ஆன்லைன் ரம்மியால் சுமார் ரூ.4 லட்சம் வரை பணத்தை இழந்த கூலி தொழிலாளியான வில்சன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பணத்தை இழப்பதோடு, தற்கொலை செய்து கொள்வதால் தமிழ்நாட்டில் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் பண இழப்பை ஏற்படுத்துவதோடு, உயிரையும் குடித்து வரும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக அனைவரும் குரல் எழுப்பி வருகின்றனர். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வலியுறுத்தி அரசியல் கட்சியினரும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

திருப்பு அனுப்பிய ஆளுநர்
இதனிடையே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி, சுமார் 4 மாதங்கள் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கிடப்பில் போட்டு, தமிழ்நாடு சட்டசபைக்கே திருப்பி அனுப்பினார். அதேபோல் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார்.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா
இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசு தரப்பில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வர மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் விளக்கம் அளித்திருந்தது.

திருச்சியைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருச்சி மாவட்டம் அருகே அஞ்சல்காரன்பட்டியைச் சேர்ந்த 26 வயதாகும் கூலி தொழிலாளியான வில்சன், ஆன்லைன் ரம்மியை தீவிரமாக விளையாடி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான அவர், கடன் பெற்று சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக சுமார் 4 லட்சம் ரூபாய் வரை பண இழப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்து இருவர் தற்கொலை
இந்த கடனை கொடுக்க முடியாததால் மன உளைச்சலில் இருந்த அவர், திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த உறவினர்கள், அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வில்சன் உயிரிழந்தார். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஆன்லைன் ரம்மியால் ரூ.16 லட்சம் பணத்தை இழந்து நேற்று தற்கொலை செய்த நிலையில், இன்று திருச்சியைச் சேர்ந்த மேலும் ஒருவர் தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications