வருண்குமார் ஐபிஎஸ் வழக்கு! திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்! வழக்கு 29-க்கு ஒத்திவைப்பு
திருச்சி: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்றைய தினம் சீமான் ஆஜரானார். இந்த வழக்கு விசாரணை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் வருண்குமார் வழக்கில் சீமான் நேற்றைய தினம் மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் சீமான் தரப்பு வழக்கறிஞர், சீமான் நாளை (இன்று ஏப்.8) ஆஜராவார் என தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகிறார். இந்த வழக்கு என்ன என்பதை பார்க்கலாம். நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து வருண்குமார் திட்டமிட்டு பழிவாங்குவதாக சீமான் புகார் கூறியிருந்தார்.
இந்த நிலையில் வருண்குமாரையும் அவருடைய மனைவியும் புதுக்கோட்டை எஸ்பியுமான வந்திதா பாண்டேவையும் எக்ஸ் வலைதள பக்கத்தில் இருந்து ஆபாசமாக விமர்சித்து சீமானின் ஆதரவாளர்கள் அவதூறு பரப்பியதாக வருண்குமார் புகார் அளித்திருந்தார்.
இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சீமான் முயற்சிப்பதாகவும் திருச்சி 4ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் வழக்கு தொடுத்திருந்தார். மேலும் நஷ்ட ஈடு கோரியிருந்த வழக்கின் விசாரணைக்கு வருண்குமார் நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராகி வாக்குமூலமும் அளித்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் சீமானுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் இதுவரை சீமான் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாலை 5 மணிக்குள் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் சீமான் தரப்பு வழக்கறிஞர் அவர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு நீதிபதி, சீமான் இன்று காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டிருந்தனர். அதன்படி சீமான் இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதி, இந்த வழக்கை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்தார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications