தூத்துக்குடிக்கு விமான நிலையம் மட்டுமல்ல.. 3 ஆயிரம் ஏக்கரில் புதிய பிரம்மாண்டம்.. மத்திய அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: பிரதமர் மோடி விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை கடந்த 3 தினங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். அதன் மூலம் இனி தூத்துக்குடியில் பெரிய ரக விமானம் வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகள் எண்ணிக்கையும் பெரிய அளவில் உயரும். இந்த சூழலில் அடுத்த அதிரடியாக, தூத்துக்குடிக்கு 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கப்பல் கட்டுமான தளம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிரதமர் மோடி விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை கடந்த 3 தினங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். ரூ.450 கோடி செலவில் உருவாக்கப்பட்டு இருக்கும் தூத்துக்குடி புதிய விமான முனையம், ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளை வரவேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Central government plans to set up a 3 000-acre shipbuilding yard in Tuticorin

விமான நிலையம்

முன்னதாக ஆண்டுக்கு வெறும் 3 லட்சம் பயணிகளை மட்டும் கையாளும் திறன் கொண்டதாக தூத்துக்குடி விமான நிலையம் இருந்தது. இந்த புதிய முனையம் தொடங்கப்பட்ட பிறகு வர இருக்கும் காலத்தில் தேசத்தின் மேலும் பல வழிகள் வரை தூத்துக்குடி இணைப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இங்கு இருக்கும் வியாபாரத்துக்கும், தொழிலுக்கும் ஊக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதன் மூலம் இனி தூத்துக்குடியில் பெரிய ரக விமானம் வந்து செல்லும் என்பது உறுதியாகி உள்ளது.

கப்பல் கட்டுமானம்

இந்த நிலையில் தற்போது தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்தும் ஒரு மெகா திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள துறைமுகங்களில் 15 ஆயிரம் ஏக்கரில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கப்பல் கட்டுமான தொகுப்புகள் செயல்படுத்தப்பட இருக்கிறது. அதில் தமிழகத்தில் தூத்துக்குடி துறைமுகம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

3000 ஏக்கர் கட்டுமான தளம்

இந்த திட்டத்திற்காக தூத்துக்குடி துறைமுகம் அருகே 1,800 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் கூடுதலாக 1,200 ஏக்கர் இடம் அதில் இணைக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 3 ஆயிரம் ஏக்கரில் இந்த கப்பல் கட்டுமான தளம் அமைக்கப்பட உள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "தூத்துக்குடியை முக்கிய கப்பல் கட்டும் மையமாக உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் தூத்துக்குடி பசுமை எரிபொருள் தொழில்துறைக்கான முக்கிய மையமாகவும் உருவாக்கப்படுகிறது.

தூத்துக்குடிக்கு மணி மகுடம்

தூத்துக்குடியில் உருவாக்கப்படும் கப்பல் கட்டுமானத்தில் கப்பல்கள், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட பசுமை எரிபொருள்கள் பயன்படும் வகையில் தயாரிக்கப்பட உள்ளது. இது தூத்துக்குடியின் மற்றொரு மணி மகுடமாக இருக்கும். ஏற்கனவே, 5 பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டங்கள் (40 லட்சம் டன் ஆண்டுக்கு) தூத்துக்குடியில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கு மட்டும் ரூ.2 லட்சம் கோடி முதலீடுகள் திட்டமிடப்பட்டிருக்கிறது.

பசுமை ஹைட்ரஜன் தொகுப்பு

தூத்துக்குடியில் உருவாகும் பசுமை ஹைட்ரஜன் தொகுப்பு உலகளவில் பாராட்டைப் பெற்றிருக்கிறது. உலக பொருளாதார மன்றம் இதனை "பசுமை ஹைட்ரஜன் தொகுப்பு" என அடையாளம் காட்டியிருக்கிறது. . இங்கு ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா போக்குவரத்துக்கான பைப்லைன் வழித்தடமும் உருவாக்கப்பட உள்ளது" இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+