தூத்துக்குடிக்கு விமான நிலையம் மட்டுமல்ல.. 3 ஆயிரம் ஏக்கரில் புதிய பிரம்மாண்டம்.. மத்திய அரசு அதிரடி
தூத்துக்குடி: பிரதமர் மோடி விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை கடந்த 3 தினங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். அதன் மூலம் இனி தூத்துக்குடியில் பெரிய ரக விமானம் வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகள் எண்ணிக்கையும் பெரிய அளவில் உயரும். இந்த சூழலில் அடுத்த அதிரடியாக, தூத்துக்குடிக்கு 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கப்பல் கட்டுமான தளம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதமர் மோடி விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை கடந்த 3 தினங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். ரூ.450 கோடி செலவில் உருவாக்கப்பட்டு இருக்கும் தூத்துக்குடி புதிய விமான முனையம், ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளை வரவேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

விமான நிலையம்
முன்னதாக ஆண்டுக்கு வெறும் 3 லட்சம் பயணிகளை மட்டும் கையாளும் திறன் கொண்டதாக தூத்துக்குடி விமான நிலையம் இருந்தது. இந்த புதிய முனையம் தொடங்கப்பட்ட பிறகு வர இருக்கும் காலத்தில் தேசத்தின் மேலும் பல வழிகள் வரை தூத்துக்குடி இணைப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இங்கு இருக்கும் வியாபாரத்துக்கும், தொழிலுக்கும் ஊக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதன் மூலம் இனி தூத்துக்குடியில் பெரிய ரக விமானம் வந்து செல்லும் என்பது உறுதியாகி உள்ளது.
கப்பல் கட்டுமானம்
இந்த நிலையில் தற்போது தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்தும் ஒரு மெகா திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள துறைமுகங்களில் 15 ஆயிரம் ஏக்கரில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கப்பல் கட்டுமான தொகுப்புகள் செயல்படுத்தப்பட இருக்கிறது. அதில் தமிழகத்தில் தூத்துக்குடி துறைமுகம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
3000 ஏக்கர் கட்டுமான தளம்
இந்த திட்டத்திற்காக தூத்துக்குடி துறைமுகம் அருகே 1,800 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் கூடுதலாக 1,200 ஏக்கர் இடம் அதில் இணைக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 3 ஆயிரம் ஏக்கரில் இந்த கப்பல் கட்டுமான தளம் அமைக்கப்பட உள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "தூத்துக்குடியை முக்கிய கப்பல் கட்டும் மையமாக உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் தூத்துக்குடி பசுமை எரிபொருள் தொழில்துறைக்கான முக்கிய மையமாகவும் உருவாக்கப்படுகிறது.
தூத்துக்குடிக்கு மணி மகுடம்
தூத்துக்குடியில் உருவாக்கப்படும் கப்பல் கட்டுமானத்தில் கப்பல்கள், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட பசுமை எரிபொருள்கள் பயன்படும் வகையில் தயாரிக்கப்பட உள்ளது. இது தூத்துக்குடியின் மற்றொரு மணி மகுடமாக இருக்கும். ஏற்கனவே, 5 பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டங்கள் (40 லட்சம் டன் ஆண்டுக்கு) தூத்துக்குடியில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கு மட்டும் ரூ.2 லட்சம் கோடி முதலீடுகள் திட்டமிடப்பட்டிருக்கிறது.
பசுமை ஹைட்ரஜன் தொகுப்பு
தூத்துக்குடியில் உருவாகும் பசுமை ஹைட்ரஜன் தொகுப்பு உலகளவில் பாராட்டைப் பெற்றிருக்கிறது. உலக பொருளாதார மன்றம் இதனை "பசுமை ஹைட்ரஜன் தொகுப்பு" என அடையாளம் காட்டியிருக்கிறது. . இங்கு ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா போக்குவரத்துக்கான பைப்லைன் வழித்தடமும் உருவாக்கப்பட உள்ளது" இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications