புரேவி புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி விமான நிலையம் நாளை மூடல்!
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: புரேவி புயல் கரையை கடக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி விமான நிலையம் நாளை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கரையை கடந்த புரேவி புயல் பாம்பன் அருகே நிலை கொண்டுள்ளது. தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் இந்த புயல் அடுத்த சில மணிநேரங்களில் கரையை கடக்க தொடங்கும்.

இப்புயலால் தூத்துக்குடி மாவட்டத்துக்கும் கனமழை என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தூத்துக்குடியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கான விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னைக்கு 3 விமானங்களும் பெங்களூருவுக்கு 1 விமானமும் இயக்கப்படுகிறது.
இதனிடையே தூத்துக்குடி விமான நிலையம் ஒட்டுமொத்மாக நாளை மூடப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications