அந்த ஒற்றை வார்த்தை.. பிரதமர் மோடியை விமர்சித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பாய்ந்த வழக்கு
தூத்துக்குடி: பிரதமர் மோடி குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில் தான் பாஜக அளித்த புகாரில் பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசியதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தான் தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார்.

தற்போது கனிமொழி தூத்துக்குடி எம்பியாக உள்ள நிலையில் மீண்டும் அவர் களமிறங்கி உள்ளார். இந்நிலையில் தான் தூத்துக்குடியில் திமுக நாடாளுமன்ற செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எம்பி கனிமொழி, திருச்செந்தூர் எம்எல்ஏவும், தமிழக மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
குறிப்பாக சேலத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மறைந்த தமிழக முன்னாள் முதல்வரான காங்கிரஸ் கட்சியின் காமராஜரை பாராட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் பேசியபோது, ‛‛காமராஜரை கட்டிப்பிடித்து விளையாடியது போல் மோடி பேசுகிறார். டெல்லியில் காமராஜரை கொல்லனும் நினைச்ச பாவிங்க நீங்க தான்’’ எனக்கூறினார். இந்த வேளையில் தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தி அவர் பிரதமர் மோடியை விமர்சித்தார்.
இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியானது. பிரதமர் மோடி குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் கூறிய ஒரு வார்த்தை சர்ச்சையானது. இதையடுத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீத தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் செய்தார்.
அதில் பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்து இருந்தார். அதோடு அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய வீடியோவும் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் அனிதா ராதகிருஷ்ணன் பேச்சு தொடர்பாக பாஜக சார்பில் தேர்தல் அதிகாரியிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக.. கூடுதல் சீட் தராததால் வேல்முருகன் அதிரடி முடிவு! -
திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்? -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
BJP- TVK- DMK: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்! -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
2021 தேர்தல் முடிவுகள்.. மக்கள் மனநிலையை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டிய கருத்துக் கணிப்புகள்! -
சொத்து கணக்கை காட்டுவாரா சங்கீதா விஜய்? தவெக தலைவர் மொத்த மதிப்பும் இவ்வளவா? திமுக மாஸ்டர் பிளான் -
யார் பெரிய தலை? கதர் கட்சியில் ’கை’கலப்பு! 2 ஆக பிரிந்த நிர்வாகிகள்! டெல்லிக்கு சென்ற பஞ்சாயத்து! -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்!












Click it and Unblock the Notifications