வெள்ளை வெள்ளையாய் மிதந்து வந்து.. திருச்செந்தூர் கடலில் ஷாக்! பதறிப் போன பக்தர்கள்! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடற்கரையில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களால் பக்தர்கள் கடும் அவதிய்டைந்தனர். இதனையடுத்து பாதுகாப்பாக நீராட கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. வெயில் காலத்தில் கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதும், கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றங்களும் ஜெல்லி மீன்கள் கரையோர பகுதிகளுக்கு அதிகளவில் வருவதற்கு காரணமாக கருதப்படுகிறது.

தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானுக்கு தமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய அறுபடை வீடுகள் உள்ளது. இந்த கோவில்கள் மலைமேல் அமைந்துள்ள நிலையில், கடலோரம் உள்ளது திருசெந்தூர் கோவில் மட்டுமே.

திருச்சீரலைவாய் என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்ட திருசெந்தூரில் முருகப் பெருமான் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியாய் காட்சி தருகிறார். இந்த கோவிலில் முருகனை வழிபடுவதன் மூலம், திருமண தடை நீங்கும், தொழில் அபிவிருத்தி அடையும் என்பது நம்பிக்கை.

Tiruchendur Jellyfish Tuticorin

திருச்செந்தூர்

மேலும், தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற முருகனுக்கு உகந்த நாட்களில் விரதமிருந்து திருச்செந்தூர் முருகப் பெருமானை தரிசித்து விட்டு மீன் சமைத்து சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யும் சிறப்பு வழக்கமும் இந்த தலத்தின் தனிச் சிறப்பு. கடந்த பல ஆண்டுகளாகவே திருசெந்தூர் முருகப் பெருமானின் புகழ் பரவ பரவ, கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தலையா? கடல் அலையா என தெரியாத அளவுக்கு மக்கள் வெள்ளம் திருச்செந்தூர் நோக்கி அணி அணியாக செல்வார்கள்.

திருச்செந்தூர் முருகன்

அதிலும், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முருகனுக்கு உகந்த நாட்களோடு சூரசம்காரத்தின் போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசிக்க வருவர். அது மட்டுமல்ல சுப முகூர்த்த தினங்களில் நூற்றுக்கணக்கான திருமணங்களும் இங்கு நடப்பது வழக்கம். இந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடற்கரையில் அமாவாசை பௌர்ணமி தினங்களில் கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம். சில நேரங்களில் அரிய வகை மீன்கள், கடல் முள்ளெலி போன்றவை கரை ஒதுங்கும்.

ஜெல்லி மீன்

இந்த நிலையில் கோவில் முன்புள்ள கடற்கரையில் ஜெல்லி மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடலில் நீராடும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடலில் மிதந்து வந்த கண்ணாடி போன்ற தோற்றமுடைய ஜெல்லி மீன்கள், கடலில் குளிக்கும் பக்தர்களின் உடலில் அரிப்பு, தடிப்பு ஏற்படுகிறது. வெயில் காலத்தில் கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதும், கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றங்களும் ஜெல்லி மீன்கள் கரையோர பகுதிகளுக்கு அதிகளவில் வருவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

பக்தர்கள்

இன்றைய தினம் 5க்கும் மேற்பட்ட ஜெல்லி மீன்கள் திருச்செந்தூர் கோவில் முன்புள்ள கடற்கரையில் கரை ஒதுங்கியது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பாதுகாப்பு பணியாளர்கள் கடலில் மிதந்து வந்த ஜெல்லி மீன்களை சேகரித்து, பக்தர்கள் குளிக்காத ஆழமான கடல் பகுதிகளில் கொண்டு சென்று விட்டனர்.

கோவில் நிர்வாகம் எச்சரிக்கை

மேலும், கடலில் குளிக்க வரும் பக்தர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், ஜெல்லி மீன்கள் தென்பட்டால் உடனடியாக கரைக்கு வர வேண்டும் என்றும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடலோர பாதுகாப்பு குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+