கனிமொழியின் 3 ஆண்டுகால 'தூத்துக்குடி' ப்ளான் வீணாகவில்லை?
Recommended Video
தூத்துக்குடி: திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட 3 ஆண்டுகளாக செய்த களப்பணி அவருக்கு கை கொடுத்திருக்கிறது என்பதையே வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளிப்படுத்துகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளாக இருந்த போதும் தொடக்க காலங்களில் இலக்கியம், பத்திரிகை துறையில் மட்டுமே ஆர்வத்தை காட்டினார் கனிமொழி. அதன் பிறகு 2007-ம் ஆண்டு திமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வானார்.
2013-ம் ஆண்டு 2-வது முறையாக ராஜ்யசபா எம்.பி.யானார். இருப்பினும் திமுகவில் மு.க.ஸ்டாலினுக்கு இணையான அந்தஸ்து அவருக்குக் கிடைக்கவில்லை. கனிமொழியின் எதிர்பார்ப்பாக அது இருந்தும் அது பற்றி அவர் பெரிதும் வெளிப்படுத்திக் கொண்டதும் இல்லை.

3 ஆண்டு பிளான்
திமுகவின் மகளிர் அணி செயலராக உள்ள கனிமொழி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னரே தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிடுவது என முடிவு செய்து களப்பணிகளைத் தொடங்கினார். தமது எம்.பி. தொகுதி நிதி மூலம் தூத்துக்குடி மாவட்டத்தின் பல கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்தார்.

தூத்துக்குடி விசிட்
தூத்துக்குடி தொடர்புடைய எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் கனிமொழி அங்கே சென்றுவிடுவார். அந்த அளவுக்கு தூத்துக்குடியுடன் தமக்கு ஒரு நெருக்கமான உறவை கனிமொழி ஏற்படுத்தியிருந்தார். அக்கட்சியினரும் கனிமொழிதான் இங்கே போட்டியிடப் போகிறார் என்பதால் எந்த கோஷ்டி பூசல்களுக்கும் இடம்கொடுக்காமல் ஒத்துழைப்பு கொடுத்தனர்.

திட்டமிட்ட பணி
இப்படி திட்டமிட்டு பணியாற்றியதால் தற்போது கனிமொழி தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறார். இத்தனைக்கும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டவர்.

ஜாதி வாக்குகள் கைவிட்டன
ஜாதிய வாக்குகளை நம்பி தமிழிசை களம் இறங்கியிருந்தார். இருந்தபோதும் பாஜகவுக்கு எதிரான தமிழக மனநிலை தமிழிசைக்கு சாதகமாக இல்லை என்பதையே தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளிப்படுத்துகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications