Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலையிலேயே கமகமக்கும் மட்டன் பிரியாணி! சிக்கன் கிரேவி! அண்ணனுக்காக கனிமொழி வைத்த கறிவிருந்து!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் காலையிலேயே மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி, அவித்த முட்டை, என கறிவிருந்து நடந்தி கவனம் ஈர்த்திருக்கிறார் கனிமொழி எம்.பி.

தனது அண்ணனும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 71ஆவது பிறந்தநாளை ஒட்டி இந்த பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார் கனிமொழி. வழக்கமாக மதியம் தான் பிரியாணி விருந்து நடைபெறும். தூத்துக்குடியில் காலையிலேயே விருந்து தொடங்கி விட்டது. கட்சிக்காரர்கள் மட்டுமின்றி பெண்கள், பொதுமக்கள், என பல தரப்பட்டோரும் கனிமொழி வைத்த விருந்தில் கலந்துகொண்டனர். சாப்பிட உட்கார்ந்திருந்தவர்களுக்கு கனிமொழியே சிறிது நேரம் உணவு பரிமாறினார்.

Kanimozhi MP Conduct mutton biryani feast in Tuticorin

ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை திருச்சி வந்த கனிமொழி, அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இரவோடு இரவாக தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இன்று காலை தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்செந்தூரில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்த கனிமொழி, மாரத்தானில் கலந்துகொண்ட வீரர் -வீராங்கனைகளில் பலரும் காலணிகள் அணியாமல் வெறும் காலில் ஓடியதை பார்த்துவிட்டு அவர்களை அழைத்து விசாரித்திருக்கிறார். இதையடுத்து அவர்களுக்கு தனது சொந்த நிதியில் காலணிகள் வாங்கிக் கொடுப்பதற்கான ஏற்பாட்டை ஆன் தி ஸ்பாட்டிலேயே செய்ததோடு, உடனடியாக மேடைக்கு வரவழைத்து வழங்கினார்.

மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ. 25 ஆயிரம், மேலும் 5 முதல் 10 இடங்களில் வரும் 6 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டன. ஆண்களுக்கான போட்டி 21 கி.மீ தூரம் என்பதும் பெண்களுக்கான போட்டி 15 கி.மீ தூரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kanimozhi MP Conduct mutton biryani feast in Tuticorin

மாரத்தான் நிகழ்ச்சியை தொடர்ந்து பிரியாணி விருந்து நடத்திய கனிமொழி, அதன் பின்னர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். அதேபோல் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர் மற்றும் உடன்குடி ஆகிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவைகளையும் இன்று காலை தொடங்கி வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+