Kulasai Dasara: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நிறைவு.. இன்று நடைபெறும் சிறப்பு பூஜைகள்! குவிந்த பக்தர்கள்
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10 ஆம் திருவிழாவான நேற்று முன் தினம் (அக்.02) நள்ளிரவு நடைபெற்ற நிலையில் 12 ஆம் நாளான இன்றுடன் விழா நிறைவு பெறுகிறது. இன்று பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம், அன்னதானம் உள்ளிட்டவைகள் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். நாட்டிலேயே மைசூருக்கு அடுத்தபடியாக குலசையில் தசரா விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், திருக்காப்பு கட்டி பல்வேறு வேடமணிந்து மக்களிடம் காணிக்கை பெற்று, கோவிலில் அதை நேர்த்திக்கடனாக செலுத்துவார்கள்.

குலசை தசரா திருவிழா
இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு, பல்வேறு வேடங்களை அணிந்து, ஊரூராக சென்று காணிக்கை வசூலித்தனர். தசரா திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஊரிலும் தசரா பிறை அமைத்து அதில் தங்கியிருந்த அம்மனை வழிபட்ட பக்தர்கள், காளி வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்தனர்.
ஊரிலும் பக்தர்கள் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊரூராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி, காணிக்கைகளும் வசூலிக்கப்பட்டது. மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இந்த தசரா திருவிழாவில், தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சூர சம்ஹார நிகழ்ச்சி
10 ஆம் திருவிழாவான அக்டோபர் 2ஆம் தேதி நள்ளிரவு மகிஷாசூர சம்ஹாரம் நடைபெற்றது. சிங்க முகம், எருமை தலை, சேவலாக உருமாறி வந்த சூரனை அம்மன் வதம் செய்தார். குலசை கடற்கரையில் சூர சம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு "ஓம் காளி", "ஜெய் காளி" என கோஷமிட்டனர்.
விழாவின் 11-ம் நாளான நேற்று காலை 8.45 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளினார். இதையடுத்து, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். மாலை 4.45 மணிக்கு அம்மன் சப்பரம் கோவிலுக்கு வந்து சேர்ந்தது. தொடர்ந்து 5 மணியளவில் அம்மனுக்கு காப்பு களையப்பட்டது.
சிறப்பு பாலாபிஷேகம், அன்னதானம்
இதையடுத்து, விரதமிருந்து வேடம் அணிந்த பக்தர்களின் காப்புகளை கோயில் அர்ச்சகர்கள் களைந்தனர். தசரா திருவிழாவின் நிறைவு நாளான இன்று பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம், அன்னதானம் நடைபெறுகிறது. தசரா திருவிழாவை முன்னிட்டு குலசை முத்தாரம்மன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது.
பக்தர்கள் வசதியை கருத்தில் கொண்டு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. உடன்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications