தூத்துக்குடி வர்றேன்னுதான் சொன்னாங்க.. அதுக்குள்ளவா? நிர்மலா சீதாராமன் எக்ஸ் பக்கத்தில் 'ரணகளம்'
சென்னை: தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை தாம் பார்வையிட வரவிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பக்கத்தில் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கடும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை டிசம்பர் 18-ந் தேதி பெருமழை வெள்ளம் புரட்டிப் போட்டது. இன்னமும் தென் மாவட்டங்கள் வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தத்தளிக்கின்றன.

இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார். தமிழ்நாட்டு பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்றார். அத்துடன் அப்போது நிர்மலா சீதாராமன் பயன்படுத்திய வார்த்தைகளும் அவரது உடல் மொழியும் மிக கடுமையான எதிர்ப்பை தமிழ்நாட்டில் உருவாக்கிவிட்டது. தமிழ்நாட்டு அரசியல் இயக்கத் தலைவர்கள் இன்னமும் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இப்பின்னணியில் வரும் டிசம்பர் 26-ந் தேதி (நாளை) தூத்துக்குடி வெள்ளப் பாதிப்புகளை தாம் பார்வையிட வருவதாக நிர்மலா சீதாராமன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதே பக்கத்தில் நெட்டிசன்கள் கடும் கருத்துகளை பதிலாக பதிவிட்டு வருகின்றனர்.
Programme details of Smt @nsitharaman's visit to Thoothukudi, Tamil Nadu on December 26, 2023. pic.twitter.com/MVOiN3d5tF
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) December 23, 2023
அதில், தமிழ்நாட்டு மக்கள் புயல் மழை வெள்ளத்தால் பாதிச்சிருக்காங்க அவங்களுக்கு எந்தவிதமான உதவியும் செய்யாமல் இந்த வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது எனக் கூறியவர் வருகிறாராம். இந்த வாய்ப்பை தூத்துக்குடி மக்கள் பயன்படுத்திக் கொண்டு தக்க பதிலடி தருவார்கள் என @dhinakarank65 என்ற நெட்டிசன் எழுதியுள்ளார். தர முடியாது என இரக்கமற்று பேசி விட்ட பின்னர் வருவது எதற்காகவாம்? அச்சத்தாலா... நாணத்தாலா...என கேள்வி கேட்டுள்ளார் @Mallika17339983 என்ற நெட்டிசன். நீங்கள் என்ன பிரதமரா? என சிலர் கேள்வி கேட்டிருக்கின்றனர். டேமேஜ் கண்ட்ரோல் என்பதற்காக தூத்துக்குடி வருகிறீர்களா? எனவும் அதில் பதிவிடப்பட்டுள்ளது. நீங்கள் ஏன் தமிழ்நாட்டுக்கு வரனும்? என ஒரு நெட்டிசன் எதிர் கேள்வி கேட்டுள்ளார். இப்பக்கத்தில் தொடர்ந்து நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications