ராதிகா இந்த தொகுதில களமிறங்கி வெற்றியை விதைக்க போறாராமே... இதுக்கு சரத்குமார் சொன்ன பதிலை பாருங்க!
தூத்துக்குடி: ராதிகா சரத்குமார் தென்மாவட்டத்தில் போட்டியிடுவது குறித்து பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சமக தலைவர் சரத்குமார் கூறினார்.
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை வரலாறு காணாத வகையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த விலை உயர்வு கண்டிப்பாக இந்த தேர்தலில் எதிரொலிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
1 அல்லது 2 சீட்டுகளுக்காக கூட்டணியிலிருந்து போட்டியிட மாட்டோம் என்று முடிவுஎடுத்துதான் கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்றும் சரத்குமார் தெரிவித்தார்.

சமக எடுத்த அதிரடி முடிவு
தமிழக சட்டசபை தேர்தல் களம் ஜெட் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என அரசியல் தலைவர்களும் 24 மணி நேரமும் பிசியாக சுற்றிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் தேர்தலின்போதும் சில கட்சிகளின் கூட்டணி இடம் மாறுவது வழக்கம். அந்த வகையில் கட்சி தொடங்கியதில் இருந்து ஒன்றிரண்டு சீட்டுக்காக திமுக, அதிமுக என மாறிமாறி ஒடி விளையாடி வந்த சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறியது.

மாற்றத்தை உருவாக்குவோம்
சமத்துவ மக்கள் கட்சியும், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய இந்திய ஜனநாயக கட்சியும் இணைந்து மாற்றத்திற்கான புதிய கூட்டணியை துவங்கியதாக அறிவித்துள்ளன.இந்த முறை எப்படியாவது கணிசமான இடங்களை கைப்பற்றி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள சமக தலைவர் சரத்குமார் சசிகலா, கமல்ஹாசன் என பலரை சந்தித்து வாருங்கள் மாற்றத்தை உருவாக்குவோம் என அழைப்பு விடுத்து வருகிறார்.

பெட்ரோல் விலை எதிரொலிக்கும்
இந்த நிலையில் சமகவின் பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடியில் நாளை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை வரலாறு காணாத வகையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த விலை உயர்வு கண்டிப்பாக இந்த தேர்தலில் எதிரொலிக்கும்.

ராதிகா எங்கு போட்டி?
கட்சியின் அடுத்தகட்ட தேர்தல் நிலைப்பாடு குறித்து நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.சமக தேர்தல் விகிதாச்சாரம் என்ன என்பதை கண்டறிய தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம். 1 அல்லது 2 சீட்டுகளுக்காக கூட்டணியிலிருந்து போட்டியிட மாட்டோம் என்று முடிவுஎடுத்துதான் கூட்டணியில் இருந்து வெளியேறினோம். ராதிகா சரத்குமார் தென்மாவட்டத்தில் போட்டியிடுவது குறித்து பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சரத்குமார் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications