Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மழை வெள்ளத்தில் ஆவணங்கள் போய்விட்டதா? நாளை முதல் 2 நாள் முகாம்! தூத்துக்குடி மக்களே மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் சேதமடைந்த மற்றும் அடித்து செல்லப்பட்ட ஆவணங்களை பெற 2 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் லட்சுமபதி அறிவித்துள்ளார்.

கடந்த 17 , 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வந்தது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Special camps will be held on December 28 and 29 to get the documents which washed out flood in Thoothukudi

குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. வீடுகள் இடிந்ததோடு, சிலர் உயிரிழந்தனர். மேலும் கால்நடைகள் பலியாகின. மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டனர். அதோடு இளைஞர்கள், மீனவர்களும் மக்களை காப்பாற்றினர்.

தற்போது இருமாவட்டங்களில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தான் தற்போது ஏற்பட்ட வெள்ளத்தில் மக்களின் கல்வி சான்றிதழ்கள் உள்பட பல்வேறு ஆவணங்கள் சேதமாகி உள்ளன. மேலும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

‛சரியும் ஆணவ சாம்ராஜ்யம்’.. திமுகவுக்கு சாபமிட்டு சபதமேற்ற தமிழிசை.. ஆக்ரோஷத்துக்கு காரணமான ட்ரோல்

இந்நிலையில் தான் இந்த ஆவணங்களை இலவசமாக மக்கள் பெற்று கொள்ள தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துள்ளது. மேலும் இதற்கான சிறப்பு முகாம்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நடத்த வேண்டும் என தெரவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவணங்களை பெற 2 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த ஆவணங்கள், சான்றுகளை பெற ஏதுவாக நாளை (டிசம்பர் 28) மற்றும் நாளை மறுநாள் (டிசம்பர் 29) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

‛‛வாய்ப்பே இல்லை’’.. கோரிக்கை வைத்து நின்ற தங்கம் தென்னரசு! மீண்டும் அழுத்திய நிர்மலா சீதாராமன்

இந்த 2 நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று மக்கள் தங்களின் சான்றிதழ், ஆவணங்களை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+