தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையில் இன்று காலை முதல் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி உள்ளது.
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகளில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக இந்தியாவில் ஒரே நாளில் 4500 பேர், கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறையும் பல மாநிலங்களில் நீடிக்கிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசின் அனுமதியுடன் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி
கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறையும் பல மாநிலங்களில் நீடிக்கிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசின் அனுமதியுடன் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

உற்பத்தி திடீர் நிறுத்தம்
இதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. ஆனால் திடீரென இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இன்று முதல் உற்பத்தி
இந்த பழுது தற்போது சரிசெய்யப்பட்ட நிலையில் இன்று காலை முதல் திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியுள்ளது. இதனையடுத்து இன்று பகல் முதல் லாரிகள் மூலம் ஆக்சிஜன் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மூடல் ஏன்?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிலம், நீர் ஆகியவற்றை மாசுபடுத்தி மக்களுக்கு உடல்நலக் கேடுகளை விளைவிக்கிறது என்பதற்காக இதனை மூட வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications