தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையில் இன்று காலை முதல் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி உள்ளது.
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகளில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக இந்தியாவில் ஒரே நாளில் 4500 பேர், கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறையும் பல மாநிலங்களில் நீடிக்கிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசின் அனுமதியுடன் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி
கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறையும் பல மாநிலங்களில் நீடிக்கிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசின் அனுமதியுடன் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

உற்பத்தி திடீர் நிறுத்தம்
இதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. ஆனால் திடீரென இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இன்று முதல் உற்பத்தி
இந்த பழுது தற்போது சரிசெய்யப்பட்ட நிலையில் இன்று காலை முதல் திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியுள்ளது. இதனையடுத்து இன்று பகல் முதல் லாரிகள் மூலம் ஆக்சிஜன் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மூடல் ஏன்?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிலம், நீர் ஆகியவற்றை மாசுபடுத்தி மக்களுக்கு உடல்நலக் கேடுகளை விளைவிக்கிறது என்பதற்காக இதனை மூட வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications