தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 4.5 கோடி மரக்கன்றுகள் நட்டுள்ளோம்.. அமைச்சர் தகவல்
தூத்துக்குடி: மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார்.
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது குறித்து அரசு ஆய்வு செய்த பின்னர், மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும். மக்களுக்கு எதிராக எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது என்றார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுற்றுச்சூழலை பாதுகாக்க கடந்த 1972-ம் ஆண்டு ஐநா சபை ஜூன் 5-ம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாட அறிவித்தது.
இந்த கொண்டாட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் நீர், நிலம், காற்று இதில் ஏதாவது ஒன்றை முக்கிய கருப்பொருளாக எடுத்து கொள்ளுமாறு, ஐநா சபை வலியுறுத்தியுள்ளது. அதன்படி இந்த ஆண்டில் காற்றின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மக்களுக்கு தூய்மையான காற்று கிடைப்பதற்காக, காற்றில் கலந்திருக்கும் மாசின் அளவை குறைக்க நடவடிக்கை எடுப்பதே அரசின் முக்கிய நோக்கமாகும்.
காற்று சுத்தமானதாக இருக்க வேண்டும். தமிழகத்தில் சிப்காட் பகுதிகளில் இயங்கும் பெரிய தொழிற்சாலைகளின் புகை கூண்டுளில் காற்று மாசை கண்காணிக்கும் மானிட்டர் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ளெியேறும் புகை அதிகமாக இருந்தால் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு உடனடியாக குறுந்தகவல் வந்துவிடும்.
பின்னர் அந்த ஆலைக்கு செல்லும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றார். மேலும் பேசிய அமைச்சர் தமிழகத்தில் எந்த இடத்திலும் நச்சு புகை வெளியேறாதவாறு, அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறினார்.
லாரிகளில் நிலக்கரி ஏற்றி செல்லும் போது தார் பாய் போட்டு மூடாமல் சென்றால் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிகளவில் மரங்கள் வளர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70 லட்சம் மரக்கன்றுகள் அரசு சார்பாக நடப்பட்டு வருவதாக கூறினார்.
அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சாலையோரங்களில் அதிக மரங்கள் நடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் நான்கரை கோடி மரங்கள் நடப்பட்டுள்ளதாக கூறினார் அமைச்சர் கருப்பணன்.
இந்தியாவிலேயே தமிழகம் தான் மரக்கன்றுகளை நடுவதிலும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கான விருதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications