தென்காசி மாவட்டமே வேண்டாம்.. தூத்துக்குடியுடன் இணைந்த 12 ஊராட்சிகள்.. என்ன காரணம்?
தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் வேண்டாம் என்றும் தங்களை தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்றும் 12 ஊராட்சி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து தென்காசி மாவட்ட ஊராட்சி வளர்ச்சி துறயைின் கட்டுப்பாட்டில் உள்ள இளையரசனேந்தல் உள்பட 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பகுதியாக தென்காசி செயல்பட்டு வந்தது. கடந்த 2019 ம் ஆண்டில் தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது.

இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. தென்காசி மாவட்டத்தின் எல்லை பகுதியாக மேற்கே கேரளா அமைந்துள்ளது. கிழக்கே தூத்துக்குடி, வடக்கே விருதுநகர், தெற்கே திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் எல்லையாக இருக்கின்றன.
இந்நிலையில் தான் தென்காசி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் குருவிக்குளம் ஊராட்சி ஒன்றியம். இது திருவேங்கடம் தாலுகாவிற்கு உட்பட்டுள்ளது. இந்த குருவிக்குளம் ஒன்றியத்தில் உள்ள சில ஊராட்சி மக்கள் தங்களை தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையுடன் இணைக்க வேண்டும் என்று கூறி வந்தனர். இதற்காக போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தான் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்டம் குருவிக்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டு இருந்த முக்கூட்டு மலை, நக்கலமுத்தன்பட்டி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, புளியங்குளம், அப்பனேரி, அய்யனேரி, சித்திரம்பட்டி, பிள்ளையார்நத்தம், இளையரனேந்தல்,
இளையரசனேந்தல் லெட்சுமியம்மாள்புரம், ஜமீன்தேவர்குளம் உள்ளிட்டவை தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதில் இளையரசனேந்தல் மட்டும் இரண்டாக இளையரசனேந்தல் எனவும், வெங்கடாச்சலபுரம் எனவும் பிரித்து தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த 12 ஊராட்சிகளும் தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் செயல்பட்டு வந்த நிலையில் இனி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் செயல்படும் என்றும், தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இளையரசனேந்தல் வருவாய் கிராமத்தில் உள்ள 12 ஊராட்சிகள் தென்காசி மாவட்டத்தில் உள்ள குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் என்ற அரசாணை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து 3 மாதத்தில் இந்த ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசு தெரிவித்து இருந்தது. அதன்படி தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் வருவாய் கிராமத்தில் இந்த 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டியில் இருந்து சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளன.ஆனால் ஊரக வளர்ச்சி துறை மட்டும் தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து வந்தது. 01.09.2017ம் ஆண்டு தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட போது இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளின் ஊராக வளர்ச்சி துறை தென்காசி மாவட்டத்துடன் தொடரும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.
இதனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் என்ற அரசாணை ரத்து செய்ய கோரி தேசிய விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கநாயகலு, ஜெயபிரகாஷ் நாராயணசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் அந்த 12 ஊராட்சிமக்கள் ஹேப்பியாகி உள்ளனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications