அந்த மர்ம நபரின் போன் கால்.. வேகமாக விரைந்த அதிகாரிகள்.. கனிமொழி வீட்டு ரெய்டுக்கு இதுதான் காரணம்!
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் எம்பி கனிமொழி வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது ஏன் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் எம்பி கனிமொழி வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது ஏன் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
நேற்று தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் எம்பி கனிமொழி வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. அதேபோல் அவரின் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனை தமிழக அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விளக்கம் அளித்துள்ளார்.

என்ன சொன்னார்
சத்யபிரதா சாஹு தனது விளக்கத்தில், இது புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை. ஒரு நபரிடம் இருந்து தூத்துக்குடி ஆட்சியருக்கு புகார் வந்தது. மேலு கனிமொழி தங்கியிருந்த இடத்தில் பண புழக்கம் இருப்பதாகவும் பண பட்டுவாடா நடைபெறவுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி வந்தது. இது போன்ற புகார்களில் நாங்கள் வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

உடனே
அதுபோல் இந்த புகாரும் தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறைக்கு தகவல்கள் அளிக்கப்பட்டது. இதை வைத்துதான் வருமானவரித்துறை சோதனை நடத்தியது.

மோசம்
ஆனால் இந்த சோதனையில் எந்த விதமான பொருளும் கைப்பற்றப்படவில்லை. அதேபோல் இந்த சோதனையில் எந்த விதமான பணமும் கைப்பற்றப்படவில்லை. வீடு, அலுவலகம் இரண்டிலும் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது என்று தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்து இருக்கிறார்.

யார்
இந்த நிலையில் தற்போது இந்த பொய்யான புகாரை அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தரப்பு கோரிக்கை வைத்து இருக்கிறது. வெறும் போன் காலை வைத்துக் கொண்டு இப்படி எல்லாம் செயல்படுவது தவறு என்றும் திமுக குற்றஞ்சாட்டி இருக்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications