எறும்பு பொடியை எடுத்து.. அதுவும் வெறும் 5 ஓட்டுக்காக.. தூத்துக்குடியை அதிர வைத்த பெண் வேட்பாளர்
அமமுக பெண் வேட்பாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்
தூத்துக்குடி: தேர்தலில் தோல்வியடைந்ததை தாங்கி கொள்ள முடியாமல் அமமுக பெண் வேட்பாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இப்படித்தான் விருதுநகர் மாவட்டத்திலும் ஒரு துயர சம்பவம் நடந்தது.. சாத்தூர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் சுகுணா.. 52 வயதாகிறது.. கணவர் பெயர் நாகராஜ்.. 58 வயதாகிறது.
இவர் சாத்தூர் நகராட்சியில் மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார்... சுகுணா சாத்தூர் நகராட்சி 19வது வார்டில் அதிமுக சார்பில் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவும் ஏற்று கொள்ளப்பட்டது.

அமமுக - அதிமுக
எனவே தீவிர பிரச்சாரத்தையும் மேற்கொண்டார்.. இவரது வெற்றிக்கு கணவர் நாகராஜ் தீயாய் வேலை பார்த்தார்.. இந்நிலையில் நேற்றைய தினம் ஓட்டுகள் எண்ணும்படி ஆரம்பமானது.. சாத்தூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் 18 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வென்றனர்... அதிமுக ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது.. ஆனால், 19வது வார்டில் போட்டியிட்ட சுகுணா தோல்வியை தழுவினார்...

சுகுனா
இந்த வார்டில் மொத்தம் 930 வாக்குகள் பதிவானது. இதில் சுகுணா 215 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சுபிதாவிடம் தோல்வியடைந்தார். இதனால் சுகுணாவும், அவரது கணவர் நாகராஜூம் அதிர்ச்சி அடைந்தனர்.. நாகராஜோ, திடீரென்று விஷத்தை எடுத்து குடித்துவிட்டார்.. இதை பார்த்து பதறபோன சுகுனாவும் குடும்பத்தினரும் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. ஆனாலு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.. அப்படித்தான் அமமுக பெண் வேட்பாளர் ஒருவரும் விஷத்தை குடிக்க முயன்றுவிட்டார்.

எண்ணிக்கை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர் மற்றும் எட்டையபுரம் உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கு எட்டையபுரத்தில் உள்ள, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் பேரூராட்சி 8-வது வார்டில், அமமுக சார்பில் போட்டியிட்ட ராமஜெயம் என்ற பெண் வேட்பாளர் 5 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.

தீவிர சிகிச்சை
இதனால் மனமுடைந்த ராமஜெயம், தேர்தலில் படுதோல்வியடைந்த அதிர்ச்சியில் எறும்பு பொடியை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்... இதை குடும்பத்தில் இருந்தவர்கள் பார்த்துவிட்டதால், உடனடியாக எறும்புப்பொடி சாப்பிட்ட ராமஜெயத்தை மீட்டு சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்... இப்போது அவருக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.. தேர்தலில் தோல்வியடைந்த காரணத்திற்காக வேட்பாளர்கள் தற்கொலை செய்து கொள்வதும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications