திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்!
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு அமைச்சரிடமே லஞ்சம் பெற்ற புகாரில், கோயில் பணியாளர்கள் 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில் இந்த குற்றத்தில் ஈடுபட்ட அர்ச்சகருக்கு, வெறுமென தடை மட்டும் விதித்தது ஏன்? என்று கேள்விகள் எழுந்தன. இதற்கு அமைச்சர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபாட்டுக்கு வரும் பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று தொடர்ந்து புகார்கள் எழுந்திருந்தன.

இதனையடுத்து இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், திடீரென திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்திற்கு சென்றிருந்தார். அங்கு, அர்ச்சகர்கள் சிலர் இவரை அணுகி சிறப்பு தரிசனத்திற்கு அழைத்து செல்வதாகவும், அதற்கு ரூ.4000 செலவாகும் என்று சொல்லி, பணம் அனுப்பு 'கூகுள் பே' நம்பரையும் கொடுத்திருக்கிறார்கள். அந்த நம்பருக்கு அமைச்சர் பணம் அனுப்பியிருக்கிறார். அதன் பின்னர்தான் வந்தது அமைச்சர் என்பது ஊழியர்களுக்கு தெரிந்திருக்கிறது.
என்னிடமே வசூல் வேட்டையா? என்று டென்ஷனான அமைச்சர் உடனடியாக ஆய்வுக்கு உத்தரவிட்டார். சுமார் 2 மணி நேரம் ஆய்வு நடந்தது. கோயிலில் முடி காணிக்கை செலுத்தும் இடத்திலும் இதேபோல பக்தர்களிடம் பணம் பெறுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து கோயிலின் இணை ஆணையர் வரவழைக்கப்பட்டு இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்றது.
பின்னர் லஞ்சம் பெற்ற புகாரில், 4 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல லஞ்ச புகாரில் சிக்கிய அர்ச்சகருக்கு கோயிலுக்கு வர தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியது. லஞ்சம் பெற்றதாக கடைநிலை ஊழியர்களை பணி நீக்கம் செய்த அமைச்சர், சாதி பார்த்து அர்ச்சருக்கு மட்டும் வலிக்காமல் தண்டனை கொடுத்திருக்கிறார் என்று பலரும் விமர்சிக்க தொடங்கினர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அமைச்சர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது அர்ச்சகர் ஊதியம் வாங்கும் ஊழியராக இல்லாமல், தன்னார்வலராக இருக்கிறார் என்பதால்தான் அவருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தவறிழைத்த அர்ச்சகரை தண்டித்தால் நீங்கள் ஏன் கொந்தளிக்கிறீர்கள்? அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ரமேஷ் கேள்வி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர்களை இழிவுப்படுத்திய அமைச்சர் ரமேஷ்! அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications