வேலூர் 12ம் வகுப்பு மாணவியிடம் எல்லை மீறிய சித்தப்பா.. வாழ்நாளில் மறக்க முடியாத தண்டனை
வேலூர்: வேலூர் அருகே தவறான முறையில் பழகி மிரட்டி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பாவுக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட சிறுமிக்குக் கிடைத்த நீதியாக இருந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்தில் நடப்பது மிகவும் வேதனைக்குரியது. இப்படியான குற்றங்களைத் தடுக்கவும், குழந்தைகளைப் பாதுகாக்கவும் நாம் எடுக்க வேண்டிய முக்கியமான சில நடவடிக்கைகளை பார்ப்போம்.
வேலூர் அருகே பொய்கை கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது இளம் பெண். இவர் பிளஸ் 2 படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்தவர் இவரது சித்தப்பா ரமேஷ் (38). கூலித் தொழிலாளி. இவர் தனது அண்ணன் மகளான பள்ளி மாணவியிடம் தவறான முறையில் பழகி பலமுறைமிரட்டி பாலியல் அத்து மீறல்கள் செய்த சித்தப்பாவை சிறையில் அடைத்தனர்.

இதனால் 2 ஆண்டுகள் பாலியல் தொந்தரவு மாணவிக்கு நடந்து வந்த நிலையில், இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் இதனை அடுத்து அனைத்து மகளிர் காவல்துறையினர் ரமேஷை கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி தீர்ப்பளித்தார் அதில் மகளிடமே அத்துமீறிய சித்தப்பாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ2 லட்சம் அபராதமும் விதித்து தீர்பளிக்கப்பட்டதை அடுத்து ரமேஷ் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.
வேலூர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட சிறுமிக்குக் கிடைத்த நீதியாக இருந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்தில் நடப்பது மிகவும் வேதனைக்குரியது. குறிப்பாக, நம்பிக்கைக்குரிய உறவினர்களே இத்தகைய செயல்களில் ஈடுபடும்போது அது அதிக அதிர்ச்சியானது ஆகும். இப்படியான குற்றங்களைத் தடுக்கவும், குழந்தைகளைப் பாதுகாக்கவும் நாம் எடுக்க வேண்டிய முக்கியமான சில நடவடிக்கைகளை பார்ப்போம்.
குழந்தைகளுக்கு 'பாதுகாப்பான தொடுதல்' கற்பித்தல்
குழந்தைகளிடம் எதைக் காம உணர்வுடன் கூடிய தீண்டல், எது அன்பான தீண்டல் என்பதை சிறு வயதிலேயே புரிய வைக்க வேண்டும். உடலில் எந்தப் பகுதிகளை மற்றவர்கள் தொடக்கூடாது என்பதைத் தெளிவாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
யாராவது தவறாக நடந்துகொண்டால், பயப்படாமல் உடனடியாகப் பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்ற தைரியத்தை ஊட்ட வேண்டும்.
'ரகசியங்கள்' குறித்த விழிப்புணர்வு
குற்றவாளிகள் பெரும்பாலும் "இதை யாரிடமும் சொல்லாதே, சொன்னால் உன்னைக் கொன்றுவிடுவேன் அல்லது உன் பெற்றோரைத் துன்புறுத்துவேன்" என்று மிரட்டுவார்கள். "உனக்கும் எனக்கும் மட்டும் தெரிந்த ரகசியம்" என்று யாராவது சொன்னால், அதை உடனே பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்று குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே எந்த ஒளிவுமறைவும் இல்லாத ஒரு நட்பு ரீதியான சூழல் வீட்டில் இருக்க வேண்டும்.
மாற்றங்களைக் கவனித்தல்
குழந்தையின் நடத்தையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டால் (உதாரணமாக: யாரிடமும் பேசாமல் இருப்பது, பள்ளிக்குச் செல்ல மறுப்பது, குறிப்பிட்ட நபரைப் பார்த்தால் பயப்படுவது அல்லது அழுவது), பெற்றோர் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.
இணையதளப் பயன்பாடு மற்றும் கண்காணிப்பு
தற்போது ஸ்மார்ட்போன்கள் வழியாகவும் குழந்தைகள் மிரட்டப்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, குழந்தைகள் அலைபேசியில் என்ன பார்க்கிறார்கள், யாரிடம் பேசுகிறார்கள் என்பதில் ஒரு கண் இருக்க வேண்டும்.
உறவினர் என்றாலும் வரம்புகள் அவசியம்
உறவினர்கள் தானே என்று அளவுக்கு அதிகமாகக் குழந்தைகளைத் தனியாக விடுவதைத் தவிர்க்க வேண்டும். "சித்தப்பா, பெரியப்பா, மாமா" என்ற உறவுமுறையைத் தாண்டி, அவர்கள் குழந்தையிடம் பழகும் விதம் சரியாக இருக்கிறதா என்பதைப் பெற்றோர் அவ்வப்போது கவனிக்க வேண்டும்.
சட்ட விழிப்புணர்வு
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டம் மிகவும் வலுவானது என்பதைப் பொதுமக்கள் உணர வேண்டும். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்ற பயம் சமூகத்தில் உருவாக வேண்டும்.
அவசர உதவிக்கு:
குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்தாலோ அல்லது அது குறித்த சந்தேகம் இருந்தாலோ உடனடியாக 1098 என்ற இலவச உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். சமூகமாக நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே இதுபோன்ற கொடூரங்களைத் தடுக்க முடியும்.












Click it and Unblock the Notifications