அப்பாவி மாறி இருக்காரே.. இவர்தான் நவீத்.. அமைச்சர் துரைமுருகன் வீடு உள்பட.. கைவச்ச இடமெல்லாம் பெருசு!
வேலூர்: ஏலகிரி மலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பண்ணை வீடு மற்றும் வாணியம்பாடியில் தொழிலதிபர்களின் வீடுகளில் புகுந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்த 20 சவரன் நகை மற்றும் பணம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லீம்பூர், ஆசிரியர் நகர், ஏலகிரிமலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் புகுந்து மர்ம நபர்கள் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் 3 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

85 சவரன் கொள்ளை
மேலும் ஏற்கனவே திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கடந்த 13 ந் தேதி முஸ்லீம்பூர் பகுதியை சேர்ந்த அதாவுர் ரஹமான் என்பவரின் வீட்டின் இரும்பு கம்பிகளை வளைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோ மற்றும் அறைகளில் இருந்த 85 சவரன் தங்க நகை மற்றும் 2 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடித்த சம்பவத்தில் சென்னாம்பேட்டை பகுதியை சேர்ந்த நவீத் என்பது விசாரணையில் தெரியவந்தது.

துரைமுருகன் வீடு
இவரைப் பிடிக்க போலீஸார் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது பெரிய பேட்டை பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த நவீத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர் இதனை தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியில் அதாவுர் ரஹமான் என்பவரின் வீடு, ஆசிரியர் நகர் பகுதியில் ஆசிரியரின் வீடு மற்றும் ஏலகிரிமலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் புகுந்து கொள்ளை முயற்சி மேலும் வழிப்பறி உள்ளிட்ட தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

4 வழக்கு பதிவு
இதனை தொடர்ந்து அவரிடமிருந்த 20 சவரன் தங்க நகைகள் மற்றும் கவரிங் நகைகள் பணம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த போலீசார் நவீத் மீது வாணியம்பாடி நகர காவல் நிலையம் மற்றும் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் 4 வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் கொள்ளை சம்பவத்தில் தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்

மக்கள் அச்சம்
வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளியில் செல்லும் வீடுகளில் கொள்ளையர்கள் புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications