திமுக பொருளாளர் துரைமுருகனின் குடிநீர் ஆலைக்கு சீல்.. அனுமதியின்றி செயல்பட்டதாக புகார்
வேலூர்: அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையின் நீர் உறிஞ்சும் பம்புக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Recommended Video
வேலூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் முழுதும் 37 குடிநீர் ஆலைகள் உரிய அனுமதி இல்லாமல் இயங்கி உள்ளதாகவும் அந்த ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

இந்த நிலையில் வேலூர் காட்பாடி அருகே உள்ளிபுதூர் கிராமத்தில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான அருவி என்ற பெயரில் உள்ள குடிநீர் ஆலையும் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது துரைமுருகனின் குடிநீர் ஆலைக்கு நீர்வள ஆதார அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றம் ஆணைக்கு இணங்க அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி விற்பனை செய்து வந்த குடிநீர் ஆலைகளுக்கு தொடர்ந்து சீல் வைக்கப்படுகிறது. இந்தநிலையில் காட்பாடியில் உள்ள ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது என்றனர்.

துரைமுருகன் திமுக ஆட்சியின்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர். தற்போதும் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இதுபோன்று மக்கள் பிரதிநிதியாக உள்ள ஒருவரே அரசிடம் உரிய அனுமதி பெறாமல் ஆலைகளை நடத்தி வந்த சம்பவம் வேலூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சராக துரைமுருகன் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications