EPFO சூப்பர் முடிவு.. பிஃஎப் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு வேலூர் அதிகாரி சொன்ன நல்ல செய்தி
வேலூர்: வருங்கால வைப்புநிதி அமைப்பில் உறுப்பினர் சேவைகளை மேம்படுத்துவதற்கும், உறுப்பினர் தரவுகளின் துல்லியத்தை உறுதி செய்வதற்கும் தனது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எப்.ஓ.) உறுப்பினர் சுயவிவரத்தை புதுப்பிக்கும் செயல்பாட்டை எளிமைப்படுத்தியுள்ளது. இந்த தகவலை வருங்கால வைப்புநிதி வேலூர் மண்டல ஆணையர் ரித்தேஷ் பஹ்வா கூறியுள்ளார்.
இதுகுறித்து வருங்கால வைப்புநிதி வேலூர் மண்டல ஆணையர் ரித்தேஷ் பஹ்வா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "உறுப்பினர் சேவைகளை மேம்படுத்துவதற்கும், உறுப்பினர் தரவுகளின் துல்லியத்தை உறுதி செய்வதற்கும் தனது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எப்.ஓ.) உறுப்பினர் சுயவிவரத்தை புதுப்பிக்கும் செயல்பாட்டை எளிமைப்படுத்தியுள்ளது. திருத்தப்பட்ட நடைமுறையின் கீழ், யுனிவர்சல் கணக்கு எண் (யு.ஏ.என்) அடிப்படையில் ஏற்கனவே ஆதார் மூலம் சரிபார்க்கப்பட்ட உறுப்பினர்கள் எந்த ஆவணத்தையும் பதிவேற்ற வேண்டிய அவசியமின்றி புதுப்பிக்க முடியும். 1.10.2017-க்கு முன்னர் யு.ஏ.என். பெறப்பட்ட சில சந்தர்ப்பங்களில் மட்டுமே, புதுப்பித்தலுக்கு வேலை வழங்குநரின் சான்றிதழ் தேவைப்படும்.

இ.பி.எப்.ஓ. தரவுத்தளத்தில் இ.பி.எப். உறுப்பினரின் தனிப்பட்ட தரவின் நிலைத்தன்மை, நம்பகத்தன்மை சேவைகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும், மோசடி அபாயத்தைத் தவிர்ப்பதற்கும் இது மிக முக்கியமானது.
உறுப்பினர் விவரங்களை மாற்ற அல்லது திருத்த வேண்டிய தேவை ஏற்பட்டால், தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும், தங்கள் கோரிக்கைகளை இணையதளத்தில் தாக்கல் செய்யவும் உறுப்பினர்களுக்கு ஒரு செயல்பாடு ஏற்கனவே கிடைக்கப் பெற்றுள்ளது. இத்தகைய கோரிக்கைகள் வேலை வழங்குனரால் இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்டு இறுதி ஒப்புதலுக்காக இ.பி.எப்.ஓ.-வுக்கு அனுப்பப்படும். பல்வேறு நிலைகளில் கோரிக்கைகள் நிலுவையில் உள்ள சுமார் 3.9 லட்சம் உறுப்பினர்களுக்கு இந்த திருத்தம் உடனடியாக பயனளிக்கும்.
இணையதள நடைமுறையில் இந்த எளிமைப்படுத்தல், உறுப்பினர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவும், தரவு நிலைத்தன்மையை உறுதி செய்யவும், பிழைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும், உறுப்பினர்களுக்கு திறமையான சேவையை வழங்கவும், வாழ்க்கையை எளிதாக்கவும் உதவும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications