EPFO சூப்பர் முடிவு.. பிஃஎப் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு வேலூர் அதிகாரி சொன்ன நல்ல செய்தி
வேலூர்: வருங்கால வைப்புநிதி அமைப்பில் உறுப்பினர் சேவைகளை மேம்படுத்துவதற்கும், உறுப்பினர் தரவுகளின் துல்லியத்தை உறுதி செய்வதற்கும் தனது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எப்.ஓ.) உறுப்பினர் சுயவிவரத்தை புதுப்பிக்கும் செயல்பாட்டை எளிமைப்படுத்தியுள்ளது. இந்த தகவலை வருங்கால வைப்புநிதி வேலூர் மண்டல ஆணையர் ரித்தேஷ் பஹ்வா கூறியுள்ளார்.
இதுகுறித்து வருங்கால வைப்புநிதி வேலூர் மண்டல ஆணையர் ரித்தேஷ் பஹ்வா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "உறுப்பினர் சேவைகளை மேம்படுத்துவதற்கும், உறுப்பினர் தரவுகளின் துல்லியத்தை உறுதி செய்வதற்கும் தனது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எப்.ஓ.) உறுப்பினர் சுயவிவரத்தை புதுப்பிக்கும் செயல்பாட்டை எளிமைப்படுத்தியுள்ளது. திருத்தப்பட்ட நடைமுறையின் கீழ், யுனிவர்சல் கணக்கு எண் (யு.ஏ.என்) அடிப்படையில் ஏற்கனவே ஆதார் மூலம் சரிபார்க்கப்பட்ட உறுப்பினர்கள் எந்த ஆவணத்தையும் பதிவேற்ற வேண்டிய அவசியமின்றி புதுப்பிக்க முடியும். 1.10.2017-க்கு முன்னர் யு.ஏ.என். பெறப்பட்ட சில சந்தர்ப்பங்களில் மட்டுமே, புதுப்பித்தலுக்கு வேலை வழங்குநரின் சான்றிதழ் தேவைப்படும்.

இ.பி.எப்.ஓ. தரவுத்தளத்தில் இ.பி.எப். உறுப்பினரின் தனிப்பட்ட தரவின் நிலைத்தன்மை, நம்பகத்தன்மை சேவைகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும், மோசடி அபாயத்தைத் தவிர்ப்பதற்கும் இது மிக முக்கியமானது.
உறுப்பினர் விவரங்களை மாற்ற அல்லது திருத்த வேண்டிய தேவை ஏற்பட்டால், தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும், தங்கள் கோரிக்கைகளை இணையதளத்தில் தாக்கல் செய்யவும் உறுப்பினர்களுக்கு ஒரு செயல்பாடு ஏற்கனவே கிடைக்கப் பெற்றுள்ளது. இத்தகைய கோரிக்கைகள் வேலை வழங்குனரால் இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்டு இறுதி ஒப்புதலுக்காக இ.பி.எப்.ஓ.-வுக்கு அனுப்பப்படும். பல்வேறு நிலைகளில் கோரிக்கைகள் நிலுவையில் உள்ள சுமார் 3.9 லட்சம் உறுப்பினர்களுக்கு இந்த திருத்தம் உடனடியாக பயனளிக்கும்.
இணையதள நடைமுறையில் இந்த எளிமைப்படுத்தல், உறுப்பினர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவும், தரவு நிலைத்தன்மையை உறுதி செய்யவும், பிழைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும், உறுப்பினர்களுக்கு திறமையான சேவையை வழங்கவும், வாழ்க்கையை எளிதாக்கவும் உதவும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications