செல்போனை பறிகொடுத்துட்டீங்களா.. திரும்பப்பெறுவது எப்படி ? ஹாய்-னு மெசேஜ் செய்தாலே போதும்!
வேலூர்: செல்போன் காணாமல் போனால் எளிதாக திரும்பப் பெற முடியுமா? வாட்ஸ் அப்பில் ஹாய் என்று ஒரு மெசேஜ் செய்தால் மட்டும் போதும், உங்கள் செல்போன் இந்த உலகத்தில் எந்த மூளையில் இருந்தாலும் கண்டுபிடித்து விடுவோம் என்கிறார்கள் வேலூர் மாவட்ட காவல்துறையினர். அது எப்படி சார் சாத்தியம் என்கிறீர்களா..இந்த பதிவினை பாருங்கள்.
இன்றைக்கு சாப்பாடு இல்லாமல் கூட இருப்பார்கள், ஆனால் செல்போன் இல்லாமல் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மக்களை செல்போன் ஆட்டிப்படைக்கிறது. அமர்களம் படத்தில் அஜித் பாடும் சத்தம் இல்லாத தனிமை பாடலில் ஆறாம் விரலாய் பேனா கேட்டேன் என்று பாடியிருப்பார். 90களில் அப்படி பாடியிருந்தால், இப்போது அதே பாடலை பாடினால், ஆறாம் விரலாய் ஸ்மாரட்போன் கேட்பேன் என்று தான் மக்கள் சொல்வார்கள். ஏனெனில் வாழ்வில் அத்தியாவசியமான இடத்தை ஸ்மார்ட்போன் பிடித்துவிட்டது. ஒரு மணி நேரம் கூட செல்போன் பார்க்காமல் இருக்க முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டார்கள் இன்றைக்கு மக்கள்.

பாத்ரூம் போனாலும் செல்போன், பல்லு விளக்கும் போதும் செல்போன், சாப்பிடும் போதும் செல்போன், வாகனம் ஒட்டும் போது கூட செல்போன் என அதற்கான என்ன ஆபத்தையும் சந்திக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்.. தங்கம் தான் இன்று வரை விலை மதிக்க முடியாத பொருளாக உள்ளது. இன்று தங்கத்தின் இடத்தை மெல்ல மெல்ல செல்போன் பிடித்து வருகிறது. ஒருவரின் செல்போனில் உள்ள தகவல்கள் தான் பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தங்க முட்டை இடும் வாத்து.. அவர்கள் செல்போனில் தேடுவது பார்ப்பது, விரும்புவது எல்லாவற்றையும் அறிந்து அவர்களுக்கு வேண்டியதை வணிகம் செய்கின்றன இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்கள்.
இது ஒருபுறம் எனில், செல்போனை திருடி விற்பது அதிகமாக நடக்கிறது. அசந்த நேரத்தில் எளிதாக அடித்து சென்றுவிடும் திருடர்கள். அந்த செல்போனை உடனடியாக ஸ்விட்ச் ஆப் செய்து திருடிவிடுகிறார்கள். மேலும் உடனே செல்போன் சர்வீஸ் சென்டர்களில் போய் சாப்ட்வேர்களை மாற்றி, பாஸ்வேர்டுகளை அழித்து மொத்தமாக செல்போனை புதிதாக்கி விற்பதும் நடக்கிறது.
இதனால் தொலைந்து போன அல்லது திருட்டுப்போன செல்போனை கண்டுபிடிப்பது மக்களுக்கு சிரமமாக இருந்தது. காவல்துறையில்புகார் அளித்தாலும் மீட்பது எளிதான விஷயம் இல்லை மக்கள் நொந்து போய்விடுகிறார்கள்.ஏனெனில் காவல்துறையில் புகார் அளித்து மீட்பது அந்த அளவிற்கு சவாலானது. அதனை சுலபம் ஆக்கி உள்ளது வேலூர் மாவட்ட காவல்துறை.. இதற்காக செல்போன் டிராக்கர் வாட்ஸ் அப் குழு ஒன்றை கடந்த ஜுலை 3ம்தேதி அறிமுகம் செய்தார்கள். இந்த குழுவின் வாட்ஸ் அப் நம்பருக்கு செல்போனை தொலைத்தவர்கள், அல்லது பறிகொடுத்தவர்கள் வாட்ஸ் அப்பில் ஹாய் என்று மெசேஜ் போட்டு, அவர்கள் கேட்கும் விவரங்களை கூறினால் போதும்.. அவர்களின் செல்போன் இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடித்துவிடுகிறார்கள் வேலூர் போலீசார்..
இதுபற்றி போலீசார் கூறும் போது, செல்போனை பறிகொடுத்தவர்களுக்காக வாட்ஸ் அப் எண்ணை கொடுத்துள்ளோம்.இதில் ஹாய் என்று மெசேஜ் போட்டால், கூகுள் சீட் ஓபன் ஆகும். அதில் செல்போன் மாடல் என்ன, எப்போது வாங்கினார்கள், எப்போது தொலைந்தது, செல்போன் குறித்து முழு தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்தால், ஒரு ரசீது தருவோம்.
அந்த ரசீதை அவர்கள் கையில் வைத்திருந்தால், நாங்கள் கூகுள் சீட்டின் அடிப்படையில் அதன் ஐஎம்ஐ நம்பரை கண்டுபிடித்து, லோக்கேசனை கண்டுபிடித்து, எங்கு இருக்கிறது என்பதை பார்த்து அவர்களுக்கு மறுபடியும் ரெக்கவர் பண்ணிக்கொடுக்க உதவி செய்வோம்.. இதுவரை 821 புகார்கள் வேலூர் மாவட்டம் முழுவதும் வந்தது. அதில் முதற்கட்டமாக 162 செல்போனை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்தோம். இப்போது 2வது கட்டமாக 210 மொபைல்களை கண்டுபிடித்து கொடுத்திருக்கிறோம்.. அதன் மதிப்பு 40 லட்சம் ரூபாய் ஆகும்" இவ்வாறு கூறினார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications