Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தொழிலை" கைவிடாத கலையரசி.. பலமுறை கைதாகியும் அடங்காத அட்டூழியம்.. மிரண்ட போலீஸ்.. பாய்ந்தது குண்டாஸ்

கஞ்சா விற்ற பெண் குண்டர் சட்டத்தில் 3வது முறையாக கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: எத்தனையோ முறை கலையரசியை கைது செய்து பார்த்தாயிற்று.. தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்த கலையரசியை 3-வது முறையாக வேலூர் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

Recommended Video

    பல முறை கைது செய்தும் அடங்காத கலையரசி.. பாய்ந்தது குண்டாஸ் - வீடியோ

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்கா வெங்குடி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன்... இவரது மனைவி கலையரசி.

    இவர்களுக்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவதுதான் தொழில்.. இருவரும் சேர்ந்து சாராயத்தை வீட்டுக்குள்ளேயே காய்ச்சி, வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்று வந்தனர்.

    இதுகுறித்து போலீசாருக்கு பலமுறை புகார் சென்றுள்ளது.. போலீசாரும் இவர்களை கையும் களவுமாக பிடித்து வழக்கு பதிவு செய்து எத்தனையோ முறை ஜெயிலில் அடைத்துள்ளனர்.

     கலையரசி

    கலையரசி

    அப்போதும் சில நாட்களிலேயே ஜாமீனில் வெளியே வந்துவிடுவார்கள்.. மறுபடியும் கள்ளச்சாராயத்தை காய்ச்சி விற்க தொடங்கிவிடுவார்கள். கடந்த மாதம் வாலாஜாபாத் அருகே வெங்குடி பாலாற்றின் கரையில் 108 லிட்டர் எரிசாராயத்துடன் கையும் களவுமாக கலையரசியை காஞ்சிபுரம் மதுவிலக்கு பிரிவு போலீஸார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இதில் அதிக முறை ஜெயிலுக்கு போனது கலையரசிதான்!

    கைது

    கைது

    பலமுறை எச்சரித்தும், கைது செய்தும், தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்று வருவதன் காரணமாக கலையரசி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியாவிற்கு உத்தரவிட்டிருந்தார்.

    கலெக்டர்

    கலெக்டர்

    எஸ்பியின் அறிவுறுத்தலின் பேரில் காஞ்சிபுரம் மதுவிலக்கு பிரிவு போலீஸார் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்த கலையரசியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்து ஜெயிலில் அடைக்க மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கும் பரிந்துரை செய்தனர்.

     குண்டர் சட்டம்

    குண்டர் சட்டம்

    போலீசாரின் பரிந்துரையை ஏற்று கலையரசியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து ஒரு வருஷம் ஜெயிலில் அடைக்க கலெக்டரும் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து கலையரசி கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்... இப்போது கள்ளசாராயம் விற்பனை செய்த கலையரசி 3வது முறையாக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+