"தொழிலை" கைவிடாத கலையரசி.. பலமுறை கைதாகியும் அடங்காத அட்டூழியம்.. மிரண்ட போலீஸ்.. பாய்ந்தது குண்டாஸ்
கஞ்சா விற்ற பெண் குண்டர் சட்டத்தில் 3வது முறையாக கைது செய்யப்பட்டார்
வேலூர்: எத்தனையோ முறை கலையரசியை கைது செய்து பார்த்தாயிற்று.. தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்த கலையரசியை 3-வது முறையாக வேலூர் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
Recommended Video
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்கா வெங்குடி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன்... இவரது மனைவி கலையரசி.
இவர்களுக்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவதுதான் தொழில்.. இருவரும் சேர்ந்து சாராயத்தை வீட்டுக்குள்ளேயே காய்ச்சி, வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்று வந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு பலமுறை புகார் சென்றுள்ளது.. போலீசாரும் இவர்களை கையும் களவுமாக பிடித்து வழக்கு பதிவு செய்து எத்தனையோ முறை ஜெயிலில் அடைத்துள்ளனர்.

கலையரசி
அப்போதும் சில நாட்களிலேயே ஜாமீனில் வெளியே வந்துவிடுவார்கள்.. மறுபடியும் கள்ளச்சாராயத்தை காய்ச்சி விற்க தொடங்கிவிடுவார்கள். கடந்த மாதம் வாலாஜாபாத் அருகே வெங்குடி பாலாற்றின் கரையில் 108 லிட்டர் எரிசாராயத்துடன் கையும் களவுமாக கலையரசியை காஞ்சிபுரம் மதுவிலக்கு பிரிவு போலீஸார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இதில் அதிக முறை ஜெயிலுக்கு போனது கலையரசிதான்!

கைது
பலமுறை எச்சரித்தும், கைது செய்தும், தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்று வருவதன் காரணமாக கலையரசி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியாவிற்கு உத்தரவிட்டிருந்தார்.

கலெக்டர்
எஸ்பியின் அறிவுறுத்தலின் பேரில் காஞ்சிபுரம் மதுவிலக்கு பிரிவு போலீஸார் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்த கலையரசியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்து ஜெயிலில் அடைக்க மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கும் பரிந்துரை செய்தனர்.

குண்டர் சட்டம்
போலீசாரின் பரிந்துரையை ஏற்று கலையரசியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து ஒரு வருஷம் ஜெயிலில் அடைக்க கலெக்டரும் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து கலையரசி கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்... இப்போது கள்ளசாராயம் விற்பனை செய்த கலையரசி 3வது முறையாக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications