வேலூரில் கணவனின் முட்டாள்தனமான ஐடியா.. கொட்டிய பணம்.. கடைசியில் மனைவிக்கு நடந்த ட்விஸ்ட்
வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஆந்திர எல்லையில் உள்ள நகரம் ஆகும். கூப்பிடும் தூரத்தில் தான் ஆந்திரா இருக்கிறது. கர்நாடகா மாநிலமும் பக்கத்தில் தான் இருக்கிறது. இதன் காரணமாக சிலர் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து சட்டவிரோதமாக மதுபானங்களை கடத்தி வந்து விற்பது அவ்வப்போது நடக்கிறது. அந்த வகையில் பேரணாம்பட்டில் கர்நாடகா மது பாக்கெட்டுகள் விற்ற நர்சிங் மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கணவனின் முட்டாள்தனமான ஐடியாவால் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட மனைவி, வெளிமாநிலத்தில் இருந்து மதுபானங்களை வாங்கி விற்றுள்ளார். கணவன் மனைவி இருவரும் கர்நாடகாவில் இருந்து மதுபானங்களை வாங்கி விற்றுள்ளனர். அவர்களை போலீசார் வீடு தேடி வந்து கண்டுபிடித்துள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழில்வேந்தனுக்கு சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்றதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் பேரணாம்பட்டு டவுன் ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் வீட்டில் சோதனை நடத்தினார்கள். அப்போது பிரபு தப்பியோடி விட்டார். விசாரணையில் பிரபுவும், அவரின் மனைவி ஜெயந்தி (வயது 32) என்பவரும் சேர்ந்து கர்நாடகா மதுபாக்கெட்களை பதுக்கி வைத்து விற்றது தெரிந்தது. பிரபு மீது ஏற்கனவே மதுபாட்டில்கள் பதுக்கி விற்க முயன்றது, ரேஷன் அரிசி கடத்தல் என பல வழக்குகள் இருந்தன.
பிரபுவின் மனைவி ஜெயந்தி பேரணாம்பட்டு பங்களாமேட்டில் உள்ளது ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் முதலாண்டு படித்து வருகிறார். அவர் போலீசாரை பார்த்ததும் அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு சென்று பதுங்கியிருக்கிறார். அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது, தன்னுடைய பெயரை சொல்லாமல், தனது தாயார் பெயரான கிருஷ்ணவேணியின் பெயரை மாற்றி கூறியிருக்கிறார்.
மேலும் அவர் தனது கணவன் பிரபு கூறியபடி கர்நாடகா மது பாக்கெட்டுகளை வீட்டில் பதுக்கி வைத்து அதிக லாபத்துக்கு விற்றதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இதையடுத்து மாணவி ஜெயந்தியை தலைமை காவலர் சங்கீதா மற்றும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கர்நாடக மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். தலைமறைவான ஜெயந்தியின் கணவன் பிரபுவை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications