விடுதலை செய்யப்போவதில்லை.. என்னை கருணை கொலை செய்துவிடுங்கள்.. பிரதமருக்கு நளினி உருக்கமான கடிதம்
வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் உள்ள நளினி, தன்னை கருணை கொலை செய்யுமாறு பிரதமருக்கும், உயர்நீதிமன்றத்துக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக நளினியும் அவரது கணவர் முருகனும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தங்களை விடுதலை செய்ய இவர்கள் விடுத்த கோரிக்கை தமிழக அமைச்சரவையால் ஏற்கப்பட்டாலும், ஆளுநரால் முடிவெடுக்காமல் இழுபறியில் உள்ளது.

இந்த நிலையில், நளினி மற்றும் முருகன் ஆகிய இருவரையும் வேலூர் சிறையில் சிறை அதிகாரிகள் துன்புறுத்துவதாக கூறி நளினி கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார்.
தங்களுக்கு தமிழக சிறையில் பாதுகாப்பு இல்லை என்பதால் வேறு மாநில சிறைக்கு மாற்ற அவர் கோரிக்கைவிடுத்துள்ளார். வேலூர் சிறையில், முருகன் துன்புறுத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். நளினி உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று, சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர், உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக உள்துறை செயலாளர் ஆகியோருக்கு நளினி கடிதங்களை எழுதியுள்ளார். அதில் 28 ஆண்டுகளாக சிறையில் வாழ்ந்து விட்டதாகவும், விடுதலைக்காக பல ஆண்டுகளாக போராடியும் விடுதலை கிடைக்கவில்லை, இனிமேல் விடுதலை கிடைக்காது என்றே தெரிகிறது. எனவே, என்னை கருணை கொலை செய்துவிடுங்கள் என்று நளினி தனது கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
வேலூர் சிறையில் இன்று நளினியை சந்தித்து பேசிய அவரது வழக்கறிஞர் புகழேந்தி, இந்த தகவலை நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications