வாணியம்பாடியில் அதிகாலையிலேயே வந்த வாசனை.. தேடி வந்த விஐபி.. ஸ்தம்பித்த வேலூர்
வேலூர்: திருப்பத்தூர் ,வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் ஒற்றை தந்தம் கொண்ட ஒற்றை யானை ஒன்று தொடர்ந்து சுற்றி வருகிறது. இந்த ஒற்றை தந்தம் கொண்ட யானை வாணியம்பாடி அருகே அதிகாலை சாலை நடுவே 3 மணிநேரமாக நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். வாகன ஓட்டிகள் யானையை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.
திருப்பத்தூர் ,வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் ஒற்றை தந்தம் கொண்ட ஒற்றை யானை ஒன்று தொடர்ந்து சுற்றி வருகிறது. கடந்த ஒரு வாரமாக காவலூர், பகுதிகளில் இருந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் அந்த யானை திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில் இருந்து வேலூர் செல்ல கூடிய முக்கிய பிரதான சாலையில் அழுகிய மாம்பழங்கள் கொட்டப்பட்டு இருக்கிறது.

அவற்றை உண்பதற்காக அந்த ஒற்றை யானை சாலை நடுவே சுமார் 3 மணி நேரமாக நின்றது .அப்போது அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் அந்த யானையை கடந்து செல்ல முடியாமல் அச்சத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர். அதன் பின்னர் தகவல் அறிந்த ஆலங்காயம் வனத்துறையினர் விரைந்து சென்று அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டிய பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து சென்றனர்.
அந்த யானை தற்போது வேலூர் மாவட்டம் ஆசனாம் பட்டு வனப்பகுதிக்குள் சென்று முகாமிட்டு உள்ளது. அந்த யானை சுமார் 3 மணி நேரம் சாலை நடுவே நின்றதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து அந்த வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பரவி விட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்காயம் பகுதியில் இருந்து வேலூர் மாவட்டம் ஆசனாம்பட்டு செல்லும் அந்த சாலை ஒருவழி சாலை என்பதால் அந்த யானையை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைந்து நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.அந்த சாலையை இருவழி சாலையாக மாற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை தொடர்ந்து வைத்து வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications