வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் தமிழக அரசு.. வேலூர் வீட்டு பணியாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு
வேலூர்: தமிழ்நாடு வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யும் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அனைத்து திட்ட பலன்களையும் பெற முடியும்.. இந்நிலையில் புதிய உறுப்பினர்களை தமிழ்நாடு வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யும் பொருட்டு வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது என்று வேலூர் தொழிலாளர் உதவி கமிஷனர் தெரிவித்தார்.
தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சமுக பாதுகாப்பு நலவாரியம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒட்டுமொத்தமாக 18 வகையான தொழிலாளர் நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நலவாரியங்களில் பதிவு செய்துள்ள பல்வேறு வகையான கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 60 வயது வரையிலான தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.

வேலூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தே.ஞானவேல் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாடு வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யும் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அனைத்து திட்ட பலன்களையும் பெறலாம். தமிழ்நாடு வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட வீட்டு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் தங்களை உறுப்பினர்களாக https://tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு பெற்ற வீட்டு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, வீட்டு வசதித்திட்டம், ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் உள்ளிட்டவற்றுக்கு நலத்திட்ட நிதியுதவித்தொகை தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
வீட்டு பணியில் ஈடுபடும் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய உறுப்பினர்களை தமிழ்நாடு வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யும் பொருட்டு வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
எனவே வீட்டு பணியில் ஈடுபடும் பணியாளர்கள், ஆதார் எண், ஆதார் எண் இணைக்கப்பட்ட தொலைபேசி, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி புத்தகம், புகைப்படம், நியமனதாரர் ஆவணம், பணிச்சான்று ஆகிய ஆவணங்களுடன் வேலூரை அடுத்த மேல்மொணவூரில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
வேலூர் பெண் போஸ்ட் மாஸ்டருக்கு ஆபாச செய்கை காட்டிய தவெக புள்ளி.. இந்த நபரா? அதிர்ச்சி பின்னணி என்ன -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications