இந்தியா பூரா ஜெயிச்சீங்க.. தமிழகத்தில் மட்டும் ஒரு சீட்டில் கூட ஜெயிக்காதது ஏன்?.. உதயநிதி கேள்வி
Recommended Video
வேலூர்: இந்தியா முழுவதும் தேர்தலில் வெற்றி பெற்ற மோடியால் தமிழகத்தில் மட்டும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாதது ஏன் என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆகஸ்ட் 5-ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக சார்பில் கதிர்ஆனந்தும், அதிமுக சார்பில் ஏசி சண்முகமும் போட்டியிடுகிறார்கள்.
இந்த நிலையில் இளைஞரணி தலைவரான பின்னர் முதல் முறையாக வேலூரில் தேர்தல் பிரசாரத்துக்கு உதயநிதி ஸ்டாலின் வருகை தந்திருந்தார்.
திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

வணக்கம்
அப்போது அவர் கூறுகையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமை கட்சிகளின் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் மக்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் 2 மாதங்களிலோ அல்லது 6 மாதங்களிலோ சட்டசபை தேர்தல் வரும். ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க ஒட்டுமொத்த தமிழகமும் காத்து கொண்டிருக்கிறது.

உதயசூரியன்
எனவே வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் கதிர்ஆனந்திற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

முதலிடத்தில் வெற்றி
வாக்குப் பதிவு இயந்திரத்தில் முதலிடத்தில் கதிர்ஆனந்தின் பெயரும் உதயசூரியன் சின்னமும் இருக்கிறது. அது போல் வாக்கு எண்ணிக்கையின் போது அவருடைய பெயரும் நம் இயக்கத்தின் சின்னமும் முதலிடத்தில் இருக்க வேண்டும்.

விரட்டியடியுங்கள்
கதிர் ஆனந்தை எதிர்த்து போட்டியிடும் நபர் டெபாசிட் வாங்கக் கூடாது என்பது என் ஆசை. இந்தியா முழுவதும் வெற்றி பெறும் மோடியால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலின் போது அதிமுக, பாஜகவை விரட்டியது போல் இந்த முறையும் விரட்டியடியுங்கள் என்றார் உதயநிதி.












Click it and Unblock the Notifications