வேலூரில் வீடு.. 5 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் .. மாற்றுத்திறனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு
வேலூர்: மாற்றுத்திறனாளிகள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம் என வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவித்துள்ளார்.
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அவர்களின் உடலில் உள்ள குறைகளின் அளவைப் பொறுத்து மத்திய மற்றும் தமிழக அரசின் உதவிகளை பெறுவதற்கான அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று நலவாரியமும் இருக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க கடன்வசதி, மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்கடை வைத்துக் கொள்ள அனுமதி, மாதம் மாதம் உதவி தொகை, சக்கர நாற்காலி, இலவச பேருந்து பயண அட்டை போன்ற பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியிலும் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
இதுதவிர வீடு வாங்க விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வீடும் கட்டித்தருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம் என வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகளுக்கு பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்கு தொகையில் ரூ.1.5 லட்சம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் முதல் 5 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குளவிமேட்டில் 12 வீடுகளும், டோபிகானாவில் 3 வீடுகளும், பத்தலப்பள்ளியில் 290 வீடுகளும், கரிகரியில் 230 வீடுகளும் என மொத்தம் 535 வீடுகள் வழங்க தயாராக உள்ளது. தகுதியுடையவர்கள் உரிய ஆவணங்களுடன் வருகிற 18-ந் தேதி முதல் 30-ந் தேதிக்குள் வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன் அடையலாம்" இவ்வாறு வேலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications