பிற்பகல் 3 மணி நிலவரப்படி வேலூரில் 52% வாக்குப்பதிவு
Subscribe to Oneindia Tamil
வேலூர்: நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு. இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 பேர் வாக்களிக்க உள்ளார்கள்.
வேலூர் லோக்சபா தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 29.46% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது வேலூர் சட்டமன்ற தொகுதியில் 24.73 சதவீத வாக்குகளும், அணைக்கட்டு தொகுதியில் 27. 14 சதவீத வாக்குகளும், கேவி குப்பத்தில் 30.75 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது. இதேபோல் குடியாத்தம் தொகுதியில் 32.43%, வாணியம்பாடி 30.21%, ஆம்பூரில் 31.48 % வாக்குகள் பதிவாகி உள்ளது.
மக்கள் நேர்மையாக வாக்களிக்க வேண்டும்: வேலூர் ஆட்சியர் பேட்டி
வேலூர் அல்லாபுரத்தில் தனது வாக்கினை பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், "இளம் வாக்காளர்ளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடக்கிறது. எந்த தூண்டுதலுக்கும் மக்கள் இடம் தரக்கூடாது. சுதந்திரமாகவும், நேர்மையாகவும் வாக்களிக்க வேண்டும். இளம் வாக்காளர்கள் 22 சதவீதம் பேர் வேலூர் தொகுதியில் உள்ளனர்" என்றார்.
வேலூர் தேர்தலில் மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதன்படி, மொத்தம் 3,752 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரங்கள் (விவி பேட்) தலா 1,896 இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.













Click it and Unblock the Notifications