For Daily Alerts
Just In
வாகன சோதனையில் 3 கிலோ தங்கம் பறிமுதல்... மதுரையில் பறக்கும் படை அதிரடி - வீடியோ
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அங்கு அமலில் உள்ளது. எனவே, பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை அடுத்த மேலூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் கார் ஒன்றில் உரிய ஆவணங்கள் இன்றி 3 கிலோ தங்கமும், ரூ.19 லட்சத்தி 29 ஆயிரம் ரொக்கமும் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இது மதுரை தெற்கு ஆவணி மூல வீதியை சேர்ந்த நகை கடை உரிமையாளர் என்பவருக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடம் இருந்து அந்தப் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments
thiruppakrankundram by election 2016 gold money seized oneindia tamil videos தங்கம் பணம் பறிமுதல் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Near Madurai the EC officials have seized 3KG gold from a car.
Story first published: Wednesday, November 2, 2016, 15:29 [IST]