தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கு.. காவல்துறையைச் சேர்ந்த 3 பேருக்கு நீதிமன்றக் காவல்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் கடந்த ஜுலை மாதம் தொழிலதிபர் ஒருவரை பணம் கேட்டு கடத்தப்பட்டதில் தொடர்புடைய பரமத்தி வேலூர் காவல் ஆய்வாளர் முத்துகுமார், உதவி ஆய்வாளர் சரவணன், தலைமை காவலர் தர்மேந்திரன், கேரளாவைச் சேர்ந்த சுதீஷ்குமார் ஆகியோர் திருப்பூர் 2வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி பழனி இவர்கள் 4 பேரையும் ஒரு நாள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து வீரபாண்டி போலீசார் விசாரணைக்காக அவர்களை அழைத்துச் சென்றனர். காவல் துறையைச் சேர்ந்த மூவரும், கோவையில் 3.95 கோடி ஹவாலா பணம் கொண்டு சென்ற காரை கடத்தியது, அவினாசியில் புற்றுநோய் மருந்து கொண்டு வரப்பட்ட கார் ஒன்றை கடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications