காவிரி பிரச்சினை... போக்குவரத்து முடக்கம்... வாசமிழந்த ‘மல்லிகைப் பூக்கள்’- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் மல்லிகைப்பூ அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பூக்களை சந்தையில் ஏலத்தில் எடுத்து கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக காவிரி பிரச்சினை காரணமாக கர்நாடகா- தமிழகம் இடையே போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் மல்லிகைப் பூக்களை கர்நாடகா அனுப்ப இயலாமல் வியாபாரிகள் தவித்து வருகின்றன. எனவே, மல்லிகைப்பூ விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இதுபோன்ற விலைச்சரிவை சந்தித்தது இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications