பைக் திருட ஜோடி போட்டுச் சென்ற மாமன் - மச்சான் கைது... சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கினர்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அசோக்நகர், கே.கே நகர், எம்.ஜி.ஆர் நகரில் ஆகிய பகுதியில் வீட்டிற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்படும் பைக்குகள் தொடர்ந்து திருட்டு போவதாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில புகார் தெரிவித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பைக் திருடப்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகள் மூலம் திருடர்கள் அடையாளம் காணப்பட்டனர். போலீசாரின் விசாரணையில் அவர்கள் இருவரும் புதுப்பேட்டையை சேர்ந்த சிக்கேந்தர் மற்றும் திருநின்றவூர் சேர்ந்த சமீர் பாஷா என்று தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய தீவிர வாகனச் சோதனையில் அவர்கள் இருவரும் சிக்கினர். போலீசாரின் விசாரணையில் அவர்கள் இருவரும் மாமன் - மச்சான் எனத் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications